சோறு வடித்த தண்ணீரில் இதை சேர்த்து அப்ளை பண்ணுங்க… முகம் பொலிவாகும்; நடிகை சாக்ஷி அகர்வால் ப்யூட்டி டிப்ஸ்
இயற்கையான முறையில் நம்முடைய முகத்தை எவ்வாறு பொலிவாக மாற்றலாம் என்று நடிகை சாக்ஷி அகர்வால் தெரிவித்துள்ளார். இதற்காக இரண்டு பொருட்கள் மட்டும் இருந்தால் போதுமானது.
இயற்கையான முறையில் நம்முடைய முகத்தை எவ்வாறு பொலிவாக மாற்றலாம் என்று நடிகை சாக்ஷி அகர்வால் தெரிவித்துள்ளார். இதற்காக இரண்டு பொருட்கள் மட்டும் இருந்தால் போதுமானது.
சினிமா நட்சத்திரங்களை எப்போது பார்த்தாலும் பொலிவாக தெரிவார்கள். இதில் அவர்களின் சரும பராமரிப்பு முறை பெரும் பங்கு வகிக்கிறது. அதன்படி, நடிகை சாக்ஷி அகர்வால் தன்னுடைய சரும பராமரிப்பு முறை குறித்து பகிர்ந்து கொண்டார்.
Advertisment
குறிப்பாக, வீட்டில் இருக்கக் கூடிய இரண்டு பொருட்களை பயன்படுத்தி அசத்தலான ஃபேஸ்பேக் எப்படி தயாரிப்பது என நடிகை சாக்ஷி அகர்வால் தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஃபேஸ்பேக்கை தயாரிக்க இரசாயனங்கள் எதுவும் சேர்க்க வேண்டியதில்லை என்பது கூடுதல் சிறப்பு.
அரிசி வடித்த கஞ்சியை பயன்படுத்தும் பழக்கம் தற்போது நம்மிடையே கிடையாது. ஆனால், அந்த அரிசி வடித்த கஞ்சியை நம் சரும பராமரிப்பில் எப்படி பயன்படுத்தலாம் என நடிகை சாக்ஷி அகர்வால் தெரிவித்துள்ளார். குறிப்பாக, இதனை தாம் பயன்படுத்த தொடங்கிய பின்னர், தன்னுடைய சருமத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
அதன்படி, அரிசி வடித்த கஞ்சியை தனியாக எடுத்துக் கொள்ளலாம். இந்தக் கஞ்சி ஆறியதும் அதனை எடுத்து ஃப்ரிட்ஜில் சுமார் மூன்று முதல் நான்கு மணி நேரம் வைக்க வேண்டும். இப்படி வைக்கும் போது, கஞ்சி பார்ப்பதற்கு கெட்டியாக மாறி இருக்கும். இத்துடன் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை கலந்து முகத்தில் தடவலாம் என நடிகை சாக்ஷி அகர்வால் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
இதன் பின்னர், சுமார் 10 அல்லது 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடலாம். இந்த ஃபேஸ் பேக்கை தொடர்ந்து பயன்படுத்தும் போது நம் முகம் பொலிவாக மாறிவிடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு தொடர்ச்சியாக செய்யும் போது நம்முடைய சருமம் ஆரோக்கியமாக இருக்கும். இதில், இரசாயனங்கள் இல்லாததால் ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகள் ஏற்படும் சாத்தியக் கூறுகளும் கிடையாது.
நன்றி - Thagaval Kadambam Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.