/indian-express-tamil/media/media_files/2025/03/06/DB1qDETaFqHRBILiIxC4.jpg)
நடிகை சாக்ஷி அகர்வால் ஒரு சூப்பரான கொரியன் ஸ்கின்கேர் டெக்னிக்கை கூறியுள்ளார். இது ரொம்ப பயனுள்ளதாக இருக்கும், நீங்கள் உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்கள்.
வெயில் காலம் தொடங்கிவிட்டதால் பலரும் தங்கள் சருமத்தைப் பராமரிப்பதில் அக்கறையுடன் அதே நேரத்தில் செலவில்லாத டிப்ஸ்களை தேடி வருகின்றனர். சருமத்தைப் பராமரிக்க முயற்சிப்பவர்களுக்கு, நடிகை சாக்ஷி அகர்வால் சொல்லும் கொரியன் ஸ்கின்கேர் டெக்னிக் ரொம்ப பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்கள்.
வெயில் காலத்தில் சருமம் ரொம்ப வறண்டு போய்விடும், கருத்துவிடும் என்று பலரும் தங்கள் சருமத்தைப் பராமரிக்க முயற்சி செய்து வருகின்றனர். அதிலும் செலவு இல்லாமல் இயற்கை முறையில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். உங்களுக்காகத்தான், நடிகை சாக்ஷி அகர்வால் ஒரு சூப்பரான கொரியன் ஸ்கின்கேர் டெக்னிக்கை கூறியுள்ளார். இது ரொம்ப பயனுள்ளதாக இருக்கும், நீங்கள் உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்கள்.
மிஸ் வாவ் தமிழா யூடியூப் சேனலில் நடிகை சாக்ஷி அகர்வால் சோறு வடித்த தண்ணீரை பிரிட்ஜில் வச்சு அதனுடன் சோற்றுக்கற்றாழை ஜெல் கலந்து அப்ளை செய்யப்படும் கொரியன் ஸ்கின்கேர் டெக்னிக்கை கூறியுள்ளார். மேலும், இதில் சுத்தமாக செலவே கிடையாது. ரொம்ப எளிமையான சரும பராமரிப்பு முறை என்று கூறுகிறார்.
அரிசியை வேக வைத்தபின் சோறு வடிக்கும்போது, அந்த தண்ணீரை எடுத்து ஆற வைத்துக்கொள்ளுங்கள். பின்னர், அதை அந்த தண்ணீரை ஃபிரிட்ஜில் வையுங்கள். 4-5 மணி நேரத்தில் அது கூழ்போல ஐஸாக மாறிவிடும். பின்னர் அதை எடுத்துக்கொள்ளுங்கள், அதில் சோற்றுக் கற்றாழை ஜெய்ல் 1 ஸ்பூன் போட்டு நன்றாகக் கலக்குங்கள். பின்னர், அதை அப்படியே உங்கள் முகத்தில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவிவிடுங்கள். உங்களுடைய சருமம் பளபளப்பாக இருக்கும். இது ஒரு கொரியன் ஸ்கின்கேர் டெக்னிக். இதை தான் ஒரு ஆண்டாக முயற்சி பயன்படுத்தி வருவதாக நடிகை சாக்ஷி அகவர்வால் கூறுகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.