Advertisment

நிரூப்-ஐ எப்போ கல்யாணம் பண்ணப் போறீங்க? யாஷிகா ஓபன் டாக்!

யாஷிகாவும்’ பிக்பாஸ் 5 சீசனில் பங்கேற்று, இப்போது பிபி அல்டிமேட்டிலும் ஒரு போட்டியாளராக இருக்கும் நிரூப்பும் ஏற்கெனவே காதலித்து பிறகு பிரிந்த சம்பவம் பலருக்கு தெரியும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Yashika Anand

Actress yashika clarified her relationship status with bb fame niroop

'பிக் பாஸ் 2' நிகழ்ச்சியின் பங்கேற்றதன் மூலம், தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதைத் தொடர்ந்து சில படங்களில் நடித்தார்.  இதனிடையே’ யாஷிகா, சில மாதங்களுக்கு முன் தனது நெருங்கிய தோழி உயிரிழந்த’ ஒரு விபத்திலிருந்து மனதளவில்’ இப்போது தான் மெதுவாக மீண்டு வருகிறார்.

Advertisment

இந்நிலையில் யாஷிகா’ நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சமூக வலைதளங்களில் முழுமையாக ஆக்டிவாக இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் அடிக்கடி உரையாடுகிறார். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில்’ யாஷிகாவுக்கு நிரூப்புடன் எப்போது திருமணம் என்று அவரது ரசிகர் ஒருவர் கேட்டார்.

அதற்கு யாஷிகா, "நாங்கள் இப்போது நல்ல நண்பர்களாக இருக்கிறோம், எப்போதும் இருப்போம். இப்போது யாருடனும் திருமணத் திட்டம் எதுவும் இல்லை" என்று பதிலளித்தார்.

யாஷிகாவும்’ பிக்பாஸ் 5 சீசனில் பங்கேற்று, இப்போது பிபி அல்டிமேட்டிலும் ஒரு போட்டியாளராக இருக்கும் நிரூப்பும் ஏற்கெனவே காதலித்து பிறகு பிரிந்த சம்பவம் பலருக்கு தெரியும்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின்’ கடந்து வந்த டாஸ்கின் போது’ நிரூப் இதை வெளிப்படையாகவே பேசினார். மேலும் இன்று நான் இந்த நிலையில் இருப்பதற்கு யாஷிகா தான் காரணம் என அவருக்கு நன்றியும் கூறினார்.

இதனிடையே’ பிக்பாஸ் வீட்டில் ஃப்ரீஸ் டாஸ்கின் போது’ போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டுக்கு வருகை தந்தனர். அப்போது யாஷிகாவும்’ கெஸ்டாக வந்திருந்தார். அப்போது நிரூப் கண்களில் காதல் வழிய வழிய, யாஷிகாவுடன் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகியது.

இதனால் யாஷிகாவும், நிரூப்பும் விரைவில் சேர்ந்து விடுவார்கள் என’ ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் இருவருமே அப்படி ஒரு எண்ணம் இல்லை என்பதை வெளிப்படையாக கூறிவிட்டனர்.

இதற்கிடையே’ பிபி அல்டிமேட் வீட்டில்’ உங்களுக்கு இங்க என்ன வேணும் டாஸ்கின் போது’ அபிராமி’ நிரூப்-ஐ பார்த்து’ உங்கள் முன்னாள் காதலியும்’ வீட்டுக்கு வருகிறார் என்று கேள்விபட்ட போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது என கேட்டார்.

அப்போது நிரூப் அபிராமியை பார்த்து’ நீங்கள் தான் என்னுடையை முன்னாள் காதலி என எல்லார் முன்பும் போட்டு உடைக்க’ இதைக்கேட்ட வீட்டிலிருந்தவர்கள் உட்பட’ ரசிகர்களும் ஒரு நொடி சற்று திகைத்துவிட்டனர்.

அப்போதுதான் யாஷிகாவுக்கு முன்பே’ நிரூப் அபிராமியுடன் உறவில் இருந்தது அனைவருக்கும் தெரியவந்தது.  

இப்படி ஒரு சூழ்நிலையில் தான், யாஷிகாவும்’ நிரூப்-உடன் உறவிலிருந்து விலகிவிட்டதாக இப்போது தெளிவுபடுத்தியுள்ளார்.

யாஷிகா இப்போது எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் 'கடமையைச் செய்', படத்தில்’ காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். மேலும் 'பாம்பாட்டம்' மற்றும்  சல்ஃபர் ஆகிய படங்களும் அவர் கைவசம் உள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Yashika
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment