வெறும் தேங்காய் எண்ணெய் வேண்டாம்… இதை சேருங்க முடி கட்டுக்கடங்காமல் வளரும்; டாக்டர் தீபா அருளாளன்

பெண்கள் பலரும் தங்கள் தலைமுடி ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும், கவர்ச்சியாகவும் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அதற்கு என்னென்ன முறைகளைப் பயன்படுத்தலாம்? என்று மருத்துவர் தீபா அருளாளன் கூறிய டிப்ஸ் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

பெண்கள் பலரும் தங்கள் தலைமுடி ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும், கவர்ச்சியாகவும் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அதற்கு என்னென்ன முறைகளைப் பயன்படுத்தலாம்? என்று மருத்துவர் தீபா அருளாளன் கூறிய டிப்ஸ் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

author-image
WebDesk
New Update
hair will grow

தேங்காய் எண்ணெய்யில் இதை சேருங்க… முடி கட்டுக்கடங்காமல் வளரும்; டாக்டர் தீபா அருளாளன்

இளம் பெண்கள், நடுத்தர வயது பெண்கள், வயதானவர்கள் கூட, அழகான கூந்தலுக்கு ஆசைப்படுகிறார்கள். ஹேர் கட் செய்தாலும், பலரும் தங்கள் தலைமுடி ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும், கவர்ச்சியாகவும் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அதற்கு நாம் என்னென்ன முறைகளைப் பயன்படுத்தலாம்? என்று மருத்துவர் தீபா அருளாளன் கூறிய டிப்ஸ் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

Advertisment

நிறைய தண்ணீர்: முதலில், நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஒருநாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். முடி உதிர்வுக்கு முக்கிய காரணம் உடல் சூடு. எனவே, முதலில் உங்கள் உடல் சூட்டைக் குறைத்துக்கொள்ள அறிவுறுத்துகிறார் டாக்டர் தீபா. வாரத்திற்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். பலர் தேங்காய் எண்ணெய், எள் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் பயன்படுத்தலாமா? என்ற கேள்வி எழும். உண்மையில், எண்ணெய் குளியல் என்பது எள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதுதான். எள் எண்ணெயை ஜிஞ்செல்லி எண்ணெய் என்று சொல்வதில்லை, அதை நல்லெண்ணெய் (நல்ல எண்ணெய்) என்றுதான் சொல்வார்கள். 

நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் முக்கியத்துவம் என்னவென்றால், உடல் உஷ்ணத்தை குணப்படுத்தும் என்பதுதான். எண்ணெயைப் பூசுவதன் மூலம் உடலைக் குளிர்விக்கிறது. இது ஒரு முறை. உண்மையில், உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது இன்னும் சிறந்த பலனைத் தரும். எனவே, இந்த 2 விஷயங்களையும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் டாக்டர் தீபா.

ஆரோக்கியமான உணவு: ஆரோக்கியமான கூந்தலுக்கு, முதலில் புரதம் மற்றும் கால்சியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இரும்புச்சத்திலும் கவனம் செலுத்த வேண்டும். வாரத்திற்கு 3 முறை கீரை, பருப்பு சாப்பிட வேண்டும். வாரத்திற்கு 2 முறை அசைவ உணவு சாப்பிட்டால், ஆரோக்கியமான புரதங்கள் கிடைத்துவிடும். சைவம் சாப்பிடுபவர்கள் முளைகட்டிய பயறுகள், பால் அல்லது சிறுதானியங்களை சாப்பிடலாம். அப்போது சரிவிகித உணவு கிடைத்துவிடும்.

Advertisment
Advertisements

ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள். வாரத்திற்கு 3 முறையாவது எண்ணெய் தடவ வேண்டும். குளிப்பதற்கு முன் எண்ணெய் தடவி 5 நிமிடங்களுக்குப் பிறகு தலைக்குக் குளிக்கிறார்கள். உண்மையில், அப்படி செய்ய வேண்டாம் என்கிறார் டாக்டர் தீபா. குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு தலைமுடியில் தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும். சாதாரண எண்ணெய்க்குப் பதிலாக இப்டி சேர்த்து குளிக்க வேண்டும் என்கிறார் டாக்டர் தீபா.

தேவையான பொருட்கள்: அவுரிப் பொடி. உலர்ந்த நெல்லிக்காய் (நெல்லி முள்ளி) இரண்டையும் ஒரு பிடி எடுத்துக் கொள்ளுங்கள். அதன்பிறகு, 10 செம்பருத்திப் பூக்களை எடுத்துக் கொள்ளுங்கள். 2 வெற்றிலை, ஒரு கைப்பிடி துளசி, வேப்பிலை, 5 ஸ்பூன் வெந்தயம், பெரிய துண்டு கற்றாழை, கீழாநெல்லி.

கற்றாழையை நடுவில் வெட்டி, அதனுள் வெந்தயத்தை சேர்க்கவும். 2 நாட்கள் அப்படியே வைத்தால் முளைக்கும். அதன் பிறகு, வெந்தயத்தை எடுத்து ஒரு தனி கப்பில் வைக்கவும். கற்றாழையைத் தோலுரித்து அதனுடன் சேர்க்கவும். கற்றாழை மற்றும் முளைத்த வெந்தயம். ஒரு கைப்பிடி கரிசலாங்கண்ணி. இவையெல்லாம் பொடியை வாங்கிக் கொள்ளுங்கள். 

வெற்றிலையில் பல நன்மைகள் உள்ளன. இது பொடுகைத் தடுக்கிறது மற்றும் மயிர்க்கால்களை பலப்படுத்துகிறது. கரிசலாங்கண்ணி முடியை அடர்த்தியாக வளர வைக்கும் குணம் கொண்டது. கீழாநெல்லி மஞ்சள் காமாலைக்குக் கொடுக்கப்படுகிறது. உச்சந்தலையில் ஏற்படும் தொற்றுகளையும் கீழாநெல்லி தடுக்கிறது. இவையனைத்தையும் ஒரு கைப்பிடி மருதாணி இலைகள் சேர்த்து எண்ணெயை நன்கு சூடாக்கவும். சூடானதும், எல்லாப் பொருட்களையும் சேர்க்கவும். அது சடசடவென வெடிக்கும். தீயை சிம்மில் வைக்கவும். இந்த எண்ணெயை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தினால், தினமும் எண்ணெய் தடவாவிட்டாலும், தலைக்குக் குளிக்கும்போது மட்டும் தடவினால், எந்தப் பிரச்னையும் இல்லை என்கிறார் டாக்டர் தீபா.

ஒரு நாள் விட்டு தலைக்குக் குளிக்கவும். தலைக்குக் குளிப்பதற்கு முன், இந்த எண்ணெயை உச்சந்தலையில் தடவி நன்கு மசாஜ் செய்யவும். அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை அதை அப்படியே விடவும். அதன் பிறகு, தலைக்குக் குளிக்கவும்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: