புளித்த மாவில் இதை சேருங்க… கறைபிடித்த வாஷ் பேசின் பளபளப்பாக மாறும்!
விலையுயர்ந்த கிளீனிங் பொருட்களை வாங்கி பணத்தை வீணாக்காமல், வீட்டிலேயே எளிதாகக் கிடைக்கும் பொருட்களை வைத்து கறைகளை போக்க முடியும். கழிவறை, சமையலறை மற்றும் குழாய்களில் உள்ள பிடிவாதமான கறைகளை எளிதில் நீக்கலாம்
விலையுயர்ந்த கிளீனிங் பொருட்களை வாங்கி பணத்தை வீணாக்காமல், வீட்டிலேயே எளிதாகக் கிடைக்கும் பொருட்களை வைத்து கறைகளை போக்க முடியும். கழிவறை, சமையலறை மற்றும் குழாய்களில் உள்ள பிடிவாதமான கறைகளை எளிதில் நீக்கலாம்
புளித்த மாவில் இதை சேருங்க… கறைபிடித்த வாஷ் பேசின் பளபளப்பாக மாறும்!
சமையலறையில் உள்ள சிங்க் கரைபடிந்து இருப்பது எல்லா வீடுகளிலும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்னையாகும். உணவுத் துகள்கள் மற்றும் சோப்பு நுரை சேர்ந்து விடாப்பிடியான கரைகளை உருவாக்கலாம். பார்ப்பதற்கு மோசமாக இருப்பது மட்டுமின்றி, பாக்டீரியாக்களின் வாழ்விடமாகவும் இருக்கும். இந்தப் பதிவில் எளிதான முறைகளைப் பின்பற்றி எப்படி சிங்க் கரையை நீக்கலாம் என்பது பற்றி பார்க்கலாம்.
Advertisment
விலையுயர்ந்த கிளீனிங் பொருட்களை வாங்கி பணத்தை வீணாக்காமல், வீட்டிலேயே எளிதாகக் கிடைக்கும் பொருட்களை வைத்து கறைகளை போக்க முடியும். கழிவறை, சமையலறை மற்றும் குழாய்களில் உள்ள பிடிவாதமான கறைகளை எளிதில் நீக்கலாம். இந்த செய்முறை பயனுள்ளதாக இருப்பது மட்டுமல்லாமல், முற்றிலும் இயற்கையானது மற்றும் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பானது. வெறும் 10 நிமிடங்களில் உங்கள் பிரச்சனைக்கான தீர்வு கிடைத்துவிடும்.
தேவையான பொருட்கள்:
புளித்த மாவு, பேஸ்ட், உப்பு
Advertisment
Advertisements
முதலில், 2 ஸ்பூன் புளித்த மாவை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன், ஒரு சிறிய அளவு பேஸ்ட் (எந்தப் பற்பசையாகவும் இருக்கலாம்) சேருங்கள். பிறகு, ஒரு சிட்டிகை உப்பைச் சேர்த்துக்கொள்ளுங்கள். இப்போது, தண்ணீர் சேர்க்காமல், இந்த 3 பொருட்களையும் நன்றாகக் கலந்து கெட்டியான பசையாக ஆக்கிக்கொள்ளுங்கள். ஒட்டிக்கொள்ளும் அளவுக்குப் பசை கெட்டியாக இருக்க வேண்டும்.
தயாரித்த இந்தப் பசையை, கறை படிந்த பகுதிகளில் குழாயாகவோ, சிங்காகவோ அல்லது மற்ற பகுதியாகவோ இருக்கலாம் தாராளமாகத் தடவுங்கள். கையுறைகள் அணிந்துகொள்வது நல்லது. பிறகு, ஸ்டீல் ஸ்க்ரப்பரால் வட்ட வடிவில் தேய்க்கவும். தேய்த்த பிறகு, 5 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். இந்த 5 நிமிடங்களில், புளித்த மாவில் உள்ள அமிலங்கள், பற்பசை மற்றும் உப்பில் உள்ள அப்ரேசிவ் தன்மையுடன் இணைந்து, கறைகளை உடைத்துவிடும். பிறகு தண்ணீரில் கழுவினால், கறைகள் நீங்கிப் பளபளப்பதைப் பார்க்கலாம்.
வீட்டிலேயே கிடைக்கும் பொருட்களை வைத்துச் செய்யப்படுவதால், பண விரயம் இல்லை. ரசாயனங்கள் இல்லாததால், தோல் ஒவ்வாமை மற்றும் சுவாசம் சார்ந்த பிரச்சனைகள் வராது. குழந்தைகளுக்கு அருகில் பயன்படுத்தவும் பாதுகாப்பானது. நீண்ட நாட்களாகப் படிந்திருக்கும் பிடிவாதமான கறைகளையும் நீக்க முடியும்.