இரவு உணவுக்குப் பிறகு நிதானமாக நடப்பது பல குடும்பங்களில் பிரதானமாக இருந்து வருகிறது. சாதாரணமாக நடப்பதை விட, இது ஆயுர்வேதத்தில் ஆழமான வேர்களைக் கொண்டுள்ளது, மேலும் வியக்கத்தக்க அளவிலான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
டாக்டர் கே. சோம்நாத் குப்தா, இந்த பழமையான பாரம்பரியத்தின் பின்னால் உள்ள அறிவியலை விளக்கினார். (Senior Consultant Physician & Diabetology at Yashoda Hospitals Hyderabad)
இரவு உணவுக்குப் பிறகு நடப்பது செரிமான அமைப்பைத் தூண்டுகிறது, மென்மையான உணவு இயக்கத்தை ஊக்குவிக்கிறது. உப்பிசம் மற்றும் அஜீரணத்தைத் தடுக்கிறது. ஆனால் இந்த நன்மைகள் குடலுக்கு அப்பாற்பட்டவை.
இரவு உணவிற்குப் பிந்தைய நடைப்பயிற்சி ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்க உதவும், இது இன்சுலின் அதிகரிப்பதை தடுக்க உதவுகிறது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு குறிப்பாக முக்கியமானது.
இரவு உணவுக்குப் பிறகு நடப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
நடைபயிற்சியின் மென்மையான செயல்பாடு சிறந்த தூக்க தரத்தையும் ஊக்குவிக்கிறது, லேசான உடற்பயிற்சி உங்கள் உடலைத் தளர்த்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது, மேலும் அமைதியான இரவுக்கு உங்களைத் தயார்படுத்துகிறது.
கூடுதலாக, நடைபயிற்சி கலோரிகளை எரிக்கிறது, எடை மேலாண்மைக்கு உதவுகிறது மற்றும் தேவையற்ற எடை அதிகரிப்பதை தடுக்கிறது.
இரவு உணவிற்குப் பிறகு நடைபயிற்சி செல்வது ஆயுர்வேதத்துடன் அழகாக ஒத்துப்போகிறது, இது உணவுக்குப் பிறகு அமைதியான, செரிமானத்தை ஊக்குவிக்கும் செயல்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
பாரம்பரியமாக, நடைபயிற்சி சிறந்த செரிமானம், ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கு உதவுகிறது என்று நம்பப்படுகிறது, என்று டாக்டர் குப்தா சுட்டிக்காட்டினார்.
/indian-express-tamil/media/media_files/zCOUkLywEWAQI9LmGizT.jpg)
இரவு உணவிற்குப் பிறகு நடப்பது குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கினாலும், காலை நடைப்பயிற்சி சிலருக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.
காலை நடைப்பயிற்சி நாள் முழுவதும் உங்கள் வளர்சிதை மாற்றத்தை மிகவும் திறம்பட அதிகரிக்கும். காலை சூரிய ஒளியின் கூடுதல் போனஸ், இந்த விருப்பத்தை மேலும் உயர்த்துகிறது, ஏனெனில் இது செரோடோனின் அளவை அதிகரிக்கிறது, மனநிலை மற்றும் விழிப்புணர்வை மேம்படுத்துகிறது.
இருப்பினும், சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். அசௌகரியம் அல்லது அஜீரணத்தைத் தவிர்க்க, உணவுக்குப் பிறகு நடைபயிற்சிக்கு முன் 15-30 நிமிடங்கள் காத்திருக்குமாறு, டாக்டர் குப்தா அறிவுறுத்துகிறார்.
நடையின் தீவிரமும் மிதமானதாக இருக்க வேண்டும்; மிகவும் தீவிரமான செயல்பாடு தசைப்பிடிப்பு அல்லது அசௌகரியத்திற்கு வழிவகுக்கும். தனிப்பட்ட அனுபவங்கள் மாறுபடலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வயது, சுகாதார நிலைகள் மற்றும் உடற்பயிற்சி நிலைகள் போன்ற காரணிகள் அனைத்தும் ஒரு பாத்திரத்தை வகிக்கின்றன.
உங்கள் உடலைக் கேளுங்கள்
கடுமையான சில மருத்துவ நிலைமைகள் உங்களுக்கு இருந்தால், இந்த வழக்கத்தைத் தொடங்குவதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகவும். இரவு உணவிற்குப் பிறகு நடைப்பயிற்சி சரியாக இல்லை என்றால், காலை அல்லது மாலை போன்ற மாற்று நேரத்தைக் கவனியுங்கள்.
டாக்டர் குப்தாவின் கூற்றுப்படி, ஸ்ட்ரெட்ச் அல்லது யோகா போன்ற மென்மையான செயல்பாடுகளும் சிறந்த மாற்றாக இருக்கும்.
குறிப்பு
உங்கள் உடலைக் கேட்டு, உங்களுக்கு மிகவும் பொருத்தமான அணுகுமுறையைத் தேர்வு செய்யவும். நீங்கள் இரவு உணவிற்குப் பிறகு நடைபயிற்சி செய்யும் பாரம்பரியத்தை ஏற்றுக்கொண்டாலும் அல்லது மாற்று விருப்பங்களை ஆராய்ந்தாலும், உங்கள் வழக்கமான உடற்பயிற்சியில் லேசான உடல் செயல்பாடுகளை இணைப்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் கணிசமாக மேம்படுத்தும்.
Read in English: What happens to the body if you walk every day after dinner for 30 minutes?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“