வாதம் முதல் பக்கவாதம் வரை தீரும்; ஐங்கூட்டு எண்ணெய் வீட்டிலே இப்படி செய்து யூஸ் பண்ணுங்க; டாக்டர் செங்கோட்டையன்

ஐந்து எண்ணெய்களின் சக்திவாய்ந்த கலவையான இது, வாதம், மூட்டு வலி, தோல் நோய்கள் மற்றும் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்குத் தீர்வு தருகிறது.

ஐந்து எண்ணெய்களின் சக்திவாய்ந்த கலவையான இது, வாதம், மூட்டு வலி, தோல் நோய்கள் மற்றும் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்குத் தீர்வு தருகிறது.

author-image
WebDesk
New Update
Dr Sengottaiyan natural remedy

Dr Sengottaiyan

நம் வீட்டின் பொக்கிஷமாக, குழந்தை முதல் பெரியவர் வரை பல நோய்களுக்கு அருமருந்தாகப் பயன்படும் ஒரு அற்புதமான எண்ணெய் பற்றி தெரியுமா? அதுதான் ஐங்கூட்டு எண்ணெய். இந்த ஐந்து எண்ணெய்களின் கலவை, பலவிதமான ஆரோக்கியப் பிரச்சனைகளுக்குத் தீர்வு தரும். 
 
இதை வீட்டிலேயே எப்படித் தயாரிப்பது, அதற்கு என்னென்ன எண்ணெய்கள் தேவை, மற்றும் எந்தெந்த நோய்களுக்கு இதை பயன்படுத்தலாம் என்பது குறித்து இந்த வீடியோவில் தெளிவாக விளக்குகிறார் டாக்டர் செங்கோட்டையன்

Advertisment


ஐங்கூட்டு எண்ணெய் என்பது ஐந்து வெவ்வேறு எண்ணெய்களை ஒன்றாகக் கலந்து காய்ச்சித் தயாரிக்கப்படும் ஒரு மருந்துப் பொருள். இது கடைகளிலும் கிடைக்கிறது என்றாலும், வீட்டிலேயே தயாரிப்பது மிகவும் எளிது. 

இந்த அற்புத எண்ணெயைத் தயாரிக்க ஐந்து முக்கிய எண்ணெய்கள் தேவை:

விளக்கெண்ணெய்
நல்லெண்ணெய்
வேப்ப எண்ணெய், 
புன்னை எண்ணெய்
புங்கன் எண்ணெய்

Advertisment
Advertisements

இந்த ஐந்து எண்ணெய்களையும் சம அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, ஒவ்வொரு எண்ணெயிலும் 100 மில்லி அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம்.

இந்த ஐந்து எண்ணெய்களையும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாகக் கலக்கவும்.

மிகவும் குறைந்த தீயில் வைத்து சுமார் 10 நிமிடங்கள் மட்டும் காய்ச்சவும். எண்ணெய்கள் ஒன்றாகக் கலப்பதற்காகவே காய்ச்சுகிறோமே தவிர, அவை கெட்டியாகவோ அல்லது கொதித்து குறுகவோ தேவையில்லை. எண்ணெய் கொதிநிலைக்கு வருவதற்கு முன்பே அடுப்பை அணைத்து விடவும்.

காய்ச்சிய எண்ணெயை ஆற வைத்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளலாம்.

ஐங்கூட்டு எண்ணெயை பயன்படுத்தும் முறை

Knee pain joint

வாத சம்பந்தமான பிரச்சனைகள், கை கால் வலி, மூட்டு வலி, சிரங்கு, சொறி, சோரியாசிஸ், ஸ்கால்ப் சோரியாசிஸ், கரப்பான் போன்ற அனைத்து வியாதிகளுக்கும் இந்த எண்ணெயை வெளிப்பூச்சாகப் பயன்படுத்தலாம். இதற்கு குறிப்பிட்ட கால அளவு எதுவும் இல்லை; எப்போது வேண்டுமானாலும், எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

உட்பிரயோகம் (குறைந்த அளவு மட்டும்)

கனாக்கடி தோல் நோய்கள் மற்றும் வாதம் போன்ற பிரச்சனைகளுக்கு, இரவு படுக்கும் முன் ஒரு டீஸ்பூன் அளவுக்கு உள்ளுக்கு எடுத்துக்கொள்ளலாம். மலச்சிக்கல் உள்ளவர்கள் மற்றும் குடல் பூச்சிகள், குடல் புழுக்கள் உள்ளவர்கள் ஒரு டீஸ்பூன் அளவுக்கு உள்ளுக்கு எடுத்து வரலாம்.

குழந்தைகளுக்கு: குழந்தைகளுக்கு இந்த எண்ணெயை உள்ளுக்கு கொடுக்க வேண்டாம். அவர்களுக்கு வெளிப்பூச்சாக மட்டுமே பயன்படுத்த முடியும்.
 
எண்ணெய் குளியல் செய்யும் போது, இந்த எண்ணெயை உடலில் தேய்த்து குளிக்கலாம்.

குளிக்கும் நீரில்: ஒரு பக்கெட் குளிக்கும் நீரில் 20 மில்லி அளவுக்கு ஐங்கூட்டு எண்ணெயைக் கலந்து குளிக்கலாம். இது உடல் புத்துணர்ச்சி பெறவும், உடல் அசதியைக் குறைக்கவும், கண்களுக்கு குளிர்ச்சி தரவும் உதவுகிறது.

கூடுதல் குறிப்புகள்:

ஐங்கூட்டு நெய் அல்லது ஐங்கூட்டு எண்ணெய் ஒரு எளிய தீர்வாகத் தோன்றினாலும், வெளிப்பூச்சாக தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், உங்கள் தோல் ஆரோக்கியம் மேம்படுவதை நீங்களே காணலாம். மூட்டு வலி, குதிகால் வலி போன்ற பிரச்சனைகளுக்கு, தினமும் அப்ளை செய்வதற்கு முன், ஒரு டீஸ்பூன் எண்ணெயை ஒரு சிறிய வாணலியில் போட்டு லேசாக சூடுபடுத்தி, மிதமான சூட்டில் அப்ளை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இது சிறந்த அழற்சி எதிர்ப்பு விளைவுகளை (anti-inflammatory effects) ஏற்படுத்தும்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: