கேன்ஸ் 2025: நெற்றியில் சிந்தூர் உடன் பனாரஸ் புடவையில் ஐஸ்வர்யா ராயின் அரச தோற்றம்; நெக்லெஸ் மதிப்பு இவ்வளவா?

இதில் மிக முக்கியமாக, 500 காரட் மொசாம்பிக் ரூபிகள் மற்றும் வெட்டப்படாத வைரங்கள் பதிக்கப்பட்ட நெக்லெஸ், அவரது தோற்றத்திற்கு மேலும் மெருகூட்டியது.

இதில் மிக முக்கியமாக, 500 காரட் மொசாம்பிக் ரூபிகள் மற்றும் வெட்டப்படாத வைரங்கள் பதிக்கப்பட்ட நெக்லெஸ், அவரது தோற்றத்திற்கு மேலும் மெருகூட்டியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Aishwarya Rai Bachchan cannes

Aishwarya Rai Bachchan cannes

சமீபத்திய கேன்ஸ் திரைப்பட விழாவில், உலக அழகி ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது வசீகரமான தோற்றத்தால் அனைவரையும் கவர்ந்தார். மணீஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த ஆடம்பரமான ஆடை மற்றும் ஆபரணங்களுடன் ரெட் கார்ப்பெட்டில் தோன்றிய ஐஸ்வர்யா, இந்திய பாரம்பரியத்தையும், நவீனத்துவத்தையும் ஒருங்கே வெளிப்படுத்தினார்.

Advertisment

கேன்ஸ் 2025: ஐஸ்வர்யா ராயின் அரச தோற்றம்!

கேன்ஸ் 2025 விழாவில், ஐஸ்வர்யா ராய் பச்சன் அணிந்திருந்த ஆடை, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தந்த நிறத்தில் (Ivory) வடிவமைக்கப்பட்ட அழகிய பனாரசி பட்டுப் புடவையுடன், பிரம்மாண்டமான மணீஷ் மல்ஹோத்ரா ஆபரணங்களை அணிந்திருந்தார். இதில் மிக முக்கியமாக, 500 காரட் மொசாம்பிக் ரூபிகள் மற்றும் வெட்டப்படாத வைரங்கள் பதிக்கப்பட்ட நெக்லெஸ், அவரது தோற்றத்திற்கு மேலும் மெருகூட்டியது.

மணீஷ் மல்ஹோத்ராவின் பிரம்மாண்ட படைப்பு!

Advertisment
Advertisements

வழக்கமாக ரெட் கார்ப்பெட்டில் வெளிப்படும் தோற்றங்களுக்கு மாறாக, இந்திய கைத்தறியின் கம்பீரத்தை பறைசாற்றும் வகையில், ஐஸ்வர்யா இந்த ஆடையைத் தேர்வு செய்திருந்தார். மணீஷ் மல்ஹோத்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஐஸ்வர்யாவின் இந்த தோற்றத்தை "கான்ஸின் அழகிய இந்திய ராணி" என்று வர்ணித்தார்.

இந்த பனாரசி புடவை, வாரணாசியின் புகழ்பெற்ற நெசவு நுட்பமான 'கட்வா ப்ரோகேட்' முறையில் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு வடிவமும் தனித்தனியாக, பல ஷட்டில்கள் மற்றும் கூடுதல் நூல்களைப் பயன்படுத்தி நெய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த புடவையில் உண்மையான வெள்ளி (சண்டி) ஜரிகை வேலைப்பாடுகள் செய்யப்பட்டு, அதன் புனிதத்தன்மையை மேலும் உயர்த்தியுள்ளது. இதன் மீது உண்மையான தங்கம் மற்றும் வெள்ளி ஜரிகை எம்பிராய்டரி செய்யப்பட்ட வெண்மையான துப்பட்டா அணிந்திருந்தார்.

விலைமதிப்பற்ற ரூபி மற்றும் வைர நகைகள்!

ஐஸ்வர்யா அணிந்திருந்த நகைகள், 18 காரட் தங்கத்தில் செய்யப்பட்டவை. 500 காரட்டிற்கும் அதிகமான மொசாம்பிக் ரூபிகள் மற்றும் வெட்டப்படாத வைரங்கள் பதிக்கப்பட்ட இந்த நெக்லெஸ், இந்திய கைவினையின் அசாத்திய திறனை உலக அரங்கில் வெளிப்படுத்தியது. இந்த ரூபி மற்றும் வைர நகைகள், ஆடையின் நிறத்திற்கு ஏற்றவாறு தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒட்டுமொத்த தோற்றத்திற்கும் ஒரு ராயல் அழகை அளித்தது.

சிந்தூரமும், பாரம்பரியமும்!

அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மற்றொரு அம்சம், ஐஸ்வர்யா அணிந்திருந்த அடர்த்தியான குங்குமம். இந்திய பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கும் சிந்தூர், அவரது தோற்றத்திற்கு மேலும் மெருகூட்டியது. ரெட் கார்ப்பெட்டில் நடந்தபோது, ரசிகர்களுக்கு 'நமஸ்தே' கூறி, பாரம்பரிய முறையில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார்.

ஒவ்வொரு வருடமும் கான்ஸ் விழாவில் தனது தோற்றத்தால் அனைவரையும் கவர்ந்து வரும் ஐஸ்வர்யா ராய் பச்சன், இந்த வருடமும் தனது தனித்துவமான பாணியால், இந்திய கலாச்சாரத்தையும், கலை நேர்த்தியையும் உலக அரங்கில் பெருமையுடன் பறைசாற்றினார். தனது மகள் ஆராத்யா பச்சனுடன் கான்ஸ் விழாவிற்கு வருகை தந்த ஐஸ்வர்யா, லோரியல் நிறுவனத்தின் தூதுவராக 2002 ஆம் ஆண்டு முதல் இந்த விழாவில் பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read in English: Aishwarya Rai Bachchan returns to Cannes red carpet in an ivory sari and sindoor; netizens say, ‘finally wearing something that is matching her beauty’

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: