உடம்பில் இருக்கும் அமில தன்மையை போக்கும் தண்ணீர்... இப்படி குடித்தால் இவ்வளவு நன்மை இருக்கு: விளக்கும் டாக்டர் தீபா
சிலருக்கு சாப்பிட்டவுடன் நெஞ்செரிச்சல் இருந்துகொண்டே இருக்கும். இரவில் படுக்கும்போது சிலருக்கு மூக்கு வழியாகவோ அல்லது நெஞ்சிலேயே உணவு வருவது போன்ற உணர்வு இருக்கும்.
சிலருக்கு சாப்பிட்டவுடன் நெஞ்செரிச்சல் இருந்துகொண்டே இருக்கும். இரவில் படுக்கும்போது சிலருக்கு மூக்கு வழியாகவோ அல்லது நெஞ்சிலேயே உணவு வருவது போன்ற உணர்வு இருக்கும்.
நம்முடைய ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையிலும், ஒரு சிறந்த வாழ்க்கையை வாழவும், ஆரோக்கியமான வாழ்வியல் முறையை பின்பற்றவும் ஆசைப்படுவோம். அந்த ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இன்று நாம் பார்க்கப்போகும் முக்கியமான விஷயம் என்னவென்றால், நீரின் அமிலத்தன்மை, அதாவது காரத்தன்மை பற்றித்தான்.
Advertisment
"என்னங்க நீர் காரத்தன்மை?" என்று நீங்கள் கேட்கலாம். இதை ஆங்கிலத்தில் "Alkalinity" என்று சொல்வார்கள். நம் உடலில் நோயின் தாக்கம் அதிகமாகும்போது, உடல் அமிலத்தன்மை அடைகிறது. ஆகவே, நம் உடலின் அமிலத்தன்மையைக் குறைப்பதற்கும், நோய் வராமல் நம்மைப் பாதுகாப்பதற்கும், நாம் காரத்தன்மை உள்ள நீரைப் பயன்படுத்துவது மிகவும் அவசியம்.
சிலருக்கு சாப்பிட்டவுடன் நெஞ்செரிச்சல் இருந்துகொண்டே இருக்கும். இரவில் படுக்கும்போது சிலருக்கு மூக்கு வழியாகவோ அல்லது நெஞ்சிலேயே உணவு வருவது போன்ற உணர்வு இருக்கும். எதையுமே சாப்பிடப் பிடிக்காமல் ஒருவித நெஞ்சரிச்சல் இருக்கும். இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால், நம்முடைய ஜீரண சக்தி குறைவாக இருந்து உடலில் அமிலத்தன்மை அதிகமாகுவதுதான். அதிக மருந்துகள் உட்கொள்வது, தண்ணீர் குடிக்காமல் இருப்பது, சரியான தூக்கம் இல்லாமை போன்ற பிரச்சனைகள் அஜீரணத்தை உண்டாக்குகின்றன.
இதைச் சரிசெய்ய, நாம் நீர் காரத்தன்மை உள்ள நீரை சரியான அளவில் குடிக்கும்போது, உடலில் உள்ள அமிலத்தன்மையைக் குறைக்க உதவுகிறது. அதுபற்றி கீழே உள்ள வீடியோவில் தெளிவாக விளக்குகிறார் மருத்துவர் தீபா