/indian-express-tamil/media/media_files/lsw9dYpxTjTxaHeRYakX.jpg)
நமது பிஸியான வாழ்க்கையில் நாம் சமைப்பதில் அதிக கவனம் செலுத்த முடியவில்லை. இந்நிலையில் 60 நாட்களுக்கு கெட்டுப்போகாத ஒரு ரெசிபியை பற்றி இன்று நாம் தெரிந்துகொள்ளலாம். இந்நிலையில் இந்த கிரேவியை நீங்கள் எதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
4 ஸ்பூன் எண்ணெய்
2 கருப்பு ஏலக்காய்
3 பச்சை ஏலக்காய்
1 இஞ்ச் பட்டை
8 மிளகு
7 வெங்காயம்
15 பூண்டு
6 தக்காளி
15 ஊறவைத்த முந்திரி
4 ஊறவைத்த காஷ்மீரி வத்தல்
மசாலாவிற்கு
2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
5 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி பொடி
3 டேபிள் ஸ்பூன் மிளகாய் பொடி
2 டேபிள் ஸ்பூன் சீரகப் பொடி
3 டேபிள் ஸ்பூன்மஞ்சள் பொடி
செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து ஏலக்காய், பட்டை , மிளகு ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். தொடர்ந்து அதில் வெங்காயம், தக்காளி நறுக்கியது, முந்திரி, வத்தல் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தொடர்ந்து நன்றாக வதங்கியதும் அதை அரைத்துக்கொள்ள வேண்டும். இதைத்தொடர்ந்து இனியொரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அரைத்த விழுதை சேர்க்கவும். தொடர்ந்து அதில் கொத்தமல்லி பொடி, மிளகாய் பொடி, சீரகப் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
இதைத்தொடர்ந்து இந்த மசாலா பேஸ்ட் ஆறியதும். வீட்டில் ஐஸ் வைக்கும் டிரேவில் இதை ஊற்றி வைக்கவும். தொடர்ந்து இதை ப்ரீசரில் வைக்கவும். எப்போது கிரேவி செய்ய வேண்டும் என்று நினைத்தால் இதை எடுத்து பயன்படுத்தலாம்.
கிரேவி செய்யும் முறை
பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, இஞ்சி- பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி அதில் இந்த மசாலா ஐஸ் க்யூபை சேர்க்கவும். அது கரைந்து கிராவியாக மாறும் அதில் பன்னீர் அல்லது பச்சைப் பட்டானி சேர்த்து கிரேவி செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.