கற்றாழை உண்மையில் சருமத்திற்கு பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது. இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, அவை சருமத்தை ஆற்றவும் குணப்படுத்தவும் உதவுகின்றன.
இது பொதுவாக சூரிய ஒளி, முகப்பரு மற்றும் பிற தோல் நிலைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. கற்றாழை சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கும் ஹைட்ரேட் செய்வதற்கும் உதவுகிறது. இதில் வைட்டமின் பி 12 மற்றும் ஃபோலிக் அமிலம் உள்ளது, இது தோல், முடி மற்றும் நகங்களின் இயல்பான செயல்பாட்டிற்கு உதவுகிறது.
நடிகை ரோஷ்னி சோப்ரா அலோ வேரா ஐஸ் ஃபேஷியல், உண்மையில் தனக்கு வேலை செய்கிறது என்று இன்ஸ்டாவில் பகிர்ந்து கொண்டார்.
அலோ வேரா ஐஸ் தயாரிப்பது எப்படி?
புதிய கற்றாழை பயன்படுத்தவும், நீங்கள் கற்றாழை ஜெல்லையும் பயன்படுத்தலாம். இலையின் உள்ளே இருந்து ஜெல்லை சுரண்டி 5-6 மணி நேரம் ஃபிரீசரில் வைக்கவும். உங்களிடம் ஐஸ்கிரீம் செய்யும் டிரே இருந்தால் ஐஸ் கீரிம் போல, அதை உறைய வைக்கலாம்.
பிறகு கியூப்ஸ் எடுத்து முகத்தில் மசாஜ் செய்யவும், மீதமுள்ளவற்றை உங்கள் தலைமுடியில் மாஸ்க் போல தடவி, 10 நிமிடங்களுக்குப் பிறகு கழுவி பளபளப்பைக் காணலாம்.
இது பரிந்துரைக்கப்படுகிறதா?
கற்றாழையில், சருமத்திற்கு பல நன்மைகள் இருந்தாலும், DIY சிகிச்சைகளை பரிந்துரைப்பதில் மருத்துவர்கள் எச்சரிக்கையாக உள்ளனர். இது குறிப்பிட்ட செய்முறை மற்றும் தனிநபரின் தோல் வகை மற்றும் தேவைகளைப் பொறுத்தது.
கற்றாழை, தோலுக்கு பல நன்மைகள் இருப்பதாகக் காட்டப்பட்டுள்ளதால், அதை, தோல் பராமரிப்பு வழக்கத்தில் சேர்ப்பது நன்மை பயக்கும். ஆனால், உயர்தர, சுத்தமான கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்துவதும், புதிய ரெசிபியை முகத்திலும் பூசுவதற்கு முன்பு பேட்ச் டெஸ்ட் செய்வதும் முக்கியம், என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“