கற்றாழையில் இதை சேர்த்து தடவுங்க… உங்க ’தலை’யாய பிரச்னைக்கு சூப்பர் தீர்வு; டாக்டர் நித்யா

கற்றாழையின் நன்மைகள் குறித்தும், அதை தலைமுடிக்கு எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து டாக்டர் நித்யா, தன்னுடைய யூடியூப் வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.

கற்றாழையின் நன்மைகள் குறித்தும், அதை தலைமுடிக்கு எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து டாக்டர் நித்யா, தன்னுடைய யூடியூப் வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Aloe vera hair care

Aloe vera hair care

கற்றாழையில் முடி உதிர்தல் மற்றும் பொடுகுத் தொல்லையைத் தடுப்பது மற்றும் வறண்ட உச்சந்தலைக்கு சிகிச்சையளிப்பது உள்ளிட்ட பல நன்மைகள் உள்ளன. இது உங்கள் தலைமுடிக்கு வலிமை மற்றும் ஊட்டச்சத்தை சேர்க்கிறது. உங்கள் உச்சந்தலை மற்றும் முடியின் pH சமநிலையை மீட்டெடுக்கிறது.

Advertisment

கற்றாழை பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் புரோட்டியோலிடிக் என்சைம்களைக் கொண்டுள்ளது, இது உச்சந்தலையில் இறந்த சரும செல்களை சரிசெய்ய உதவுகிறது.

மேலும், கற்றாழையில் நம் சருமத்துக்கு தேவையான வைட்டமின் ஏ மற்றும் ஈ நிறைந்துள்ளன.

கற்றாழையின் நன்மைகள் குறித்தும், அதை தலைமுடிக்கு எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து டாக்டர் நித்யா, தன்னுடைய யூடியூப் வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.

Advertisment
Advertisements

பொடுகு தொல்லை நீங்க கற்றாழை

கற்றாழை எடுத்து அதன் தோலை சீவி, ஓடும் தண்ணீரில் நன்கு கழுவவும். இதை மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைக்கவும். அரைத்த பேஸ்டை ஒரு கிண்ணத்தில் மாற்றி, அதில் கொஞ்சம் மிளகுப்பொடி சேர்த்து நன்கு கலக்கவும்.

இந்த ஜெல்லை எடுத்து உங்கள் தலைமுடியின் வேர்களில் நன்கு தடவவும்.

அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் தலைமுடியைக் கழுவவும். வாரம் இரண்டு முறை இதை முயற்சிக்கவும். இப்படி செய்வதால் பொடுகு குறையும். முடி உதிர்தல், அதிக உடல் உஷ்ணம், கண் எரிச்சல் பிரச்னைக்கு இது நல்ல தீர்வு.

கற்றாழை தலைக்கு தேய்ப்பதால் உங்கள் தேகமும், கண்களும் குளுமையடையும்.

கற்றாழை ஹேர் ஆயில்

இதை ரொம்ப எளிமையாக செய்யலாம். அதேநேரம் நல்ல முடிவுகளை கொடுக்கும்.

கற்றாழை மடல் எடுத்து நேராக கீறி அதனுள் வெந்தயம் போட்டு நிரப்பி மூடி நூல் வைத்துக் கட்டி வைக்கவும். ஒருநாள் கழித்து பார்க்கும்போது, அதில் வெந்தயம் முளைக்கட்டி இருக்கும். இதை சிறிய துண்டுகளாக வெட்டி நல்லெண்ணெய்யில் சேர்த்து காய்ச்சி எடுத்து வைக்கவும்.

இத்துடன் சடாமஞ்சில் பொடி, நெல்லிக்காய் பொடி அல்லது பச்சை நெல்லிக்காயை நன்கு கசக்கி எண்ணெய்யுடன் கலக்கவும். மருதாணி இலை, கொஞ்சம் அருகம்புல் இரண்டும் தனித்தனியாக அரைத்து அந்த பேஸ்டை எண்ணெய்யில் போடவும்.

இதை தைலமாக காய்ச்சி எடுத்து வைக்கவும்.

இளநரை முடி உள்ளவர்கள் இந்த தைலத்தை தலைக்கு தேய்க்கலாம். பொடுகு, உடல் எரிச்சல், கண் எரிச்சல் பிரச்னைக்கும் இது நல்ல நிவாரணம் தரும்.

இந்த தைலம் தொடர்ந்து பயன்படுத்த உடம்பில் உள்ள அதிகமாக உஷ்ணம் குறையும். அடிவயிற்று வலி, நீர்ச்சுருக்கு, நீர்க்கடுப்பு பிரச்னைக்கும் இந்த தைலம் பயன்படுத்தலாம்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: