Advertisment

குழந்தை வரம் தரும் நெல்லி, சீரகம்... இப்படி பயன்படுத்துங்க: டாக்டர் மாயன்

நெல்லிகாயும், சீரகமும் குழந்தை பாக்கியத்தை கொடுக்கும் என மருத்துவர் மாயன் செந்தில்குமார் கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
Pregnant woman

குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிகாலத்தில் செய்ய சித்த மருத்துவம் பற்றி மருத்துவர் மாயன் செந்தில்குமார் கூறியுள்ளார், அவர் கூறுகையில், 

Advertisment

ஆதிகாலத்தில் இந்த முறையை பின்பற்றினார்கள்.  5 நெல்லிகாய் எடுத்துக் கொள்ள வேண்டும். நாட்டு நெல்லிகாய் கிடைத்தால் அதை எடுத்துக் கொள்ளலாம். அதில் கொட்டை நீக்கி நறுக்கி கொள்ளவும். அதில் 3-4 ஸ்பூன் சீரகம் எடுக்கவும். அடுப்பில் பாத்திரம் வைத்து 8 டப்ளர் தண்ணீர் சேர்த்து  நெல்லிகாய், சீரகத்தை போட்டு கொதிக்க விடவும். அதன் பின் மூடி வைக்கவும். இதை இரவில் ஊறவிடவும்.

காலையில் மீண்டும் அதை சூடு செய்ய வேண்டும். அடுப்பை சிம்மில் வைத்து தண்ணீரை சுண்ட வைக்க வேண்டும். 2 பேர் குடிக்க 2 டம்ளர் அளவு வரை தண்ணீர் காய்ச்சி விட வேண்டும். இதன்பின் அதை வடிக்கட்டி கணவன், மனைவி ஒரு டம்ளர் குடிக்கலாம். அவ்வளவு தான். இதை செய்ய  குழந்தை பாக்கியம் கிடைக்கும் என மருத்துவர் கூறினார். 

Advertisment
Advertisement

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment