காலி பால் கவர் இருந்தா எலியை வீட்டை விட்டே துரத்தலாம்; இந்த டெக்னிக் டிரை பண்ணுங்க!

வீடுகளில் அடிக்கடி தொல்லை கொடுக்கும் பூச்சிகளான பல்லிகள், கரப்பான் பூச்சிகள், எலிகள் மற்றும் பெருச்சாளிகளால் அவதிப்படுபவர்கள் ஏராளம். இவை நம் வீட்டின் சுகாதாரத்தை கெடுப்பது மட்டுமல்லாமல், சில நேரங்களில் நோய்களைப் பரப்பவும் காரணமாகின்றன.

வீடுகளில் அடிக்கடி தொல்லை கொடுக்கும் பூச்சிகளான பல்லிகள், கரப்பான் பூச்சிகள், எலிகள் மற்றும் பெருச்சாளிகளால் அவதிப்படுபவர்கள் ஏராளம். இவை நம் வீட்டின் சுகாதாரத்தை கெடுப்பது மட்டுமல்லாமல், சில நேரங்களில் நோய்களைப் பரப்பவும் காரணமாகின்றன.

author-image
WebDesk
New Update
get rid of rat

காலி பால் கவர் இருந்தா எலியை வீட்டை விட்டே துரத்தலாம்; இந்த டெக்னிக் டிரை பண்ணுங்க!

வீடுகளில் அடிக்கடி தொல்லை கொடுக்கும் பூச்சிகளான பல்லிகள், கரப்பான் பூச்சிகள், எலிகள் மற்றும் பெருச்சாளிகளால் அவதிப்படுபவர்கள் ஏராளம். இவை நம் வீட்டின் சுகாதாரத்தை கெடுப்பது மட்டுமல்லாமல், சில நேரங்களில் நோய்களைப் பரப்பவும் காரணமாகின்றன. இந்த தொல்லைகளில் இருந்து விடுபட பலரும் பலவிதமான ரசாயன பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தினாலும், சில சமயங்களில் அவை பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். உங்கள் வீட்டிலுள்ள சில எளிய பொருட்களைக் கொண்டே எலித் தொல்லைகளில் இருந்து நிரந்தர தீர்வு  பெற முடியும். அந்த எளிய முறைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Advertisment

எலிகள் மற்றும் பெருச்சாளிகளின் தொல்லை பல வீடுகளில் பெரிய பிரச்னையாக உள்ளது. உணவுப் பொருட்களை நாசம் செய்வது, மின்சார வயர்களை கடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. இவற்றைப் பிடிப்பதற்கு அல்லது விரட்டுவதற்கு எளிய வீட்டு வைத்தியம் ஒன்று உள்ளது. அதற்குத் தேவையான பொருட்கள்: பொடியாக நறுக்கிய பால் பாக்கெட்டுகள் (சிறு துண்டுகளாக), கடலை மாவு (அரிசி மாவு, கோதுமை மாவு அல்லது மைதா பயன்படுத்தலாம்), வெல்லம், சமையல் எண்ணெய் (சிறிதளவு)

தயாரிக்கும் முறை: ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய பால் பாக்கெட்டுகளை எடுத்துக் கொள்ளவும். பால் பாக்கெட்டுகள் எலிகளையும் பெருச்சாளிகளையும் கவர்ந்திழுக்கும் ஒரு விதமான வாசனை கொண்டது. அதனுடன் தேவையான அளவு கடலை மாவு (நீங்கள் தேர்ந்தெடுத்த மாவு) சேர்க்கவும். மாவு, கலவையை ஒன்றாகப் பிணைக்க உதவுகிறது. பொடித்த வெல்லத்தைச் சேர்க்கவும். வெல்லம் இனிப்பு சுவை கொண்டது என்பதால், எலிகள் விரும்பி உண்ணும். கடைசியாக, சிறிது சமையல் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும். எண்ணெய், கலவை மேலும் கவர்ச்சியாகவும், உண்ணும் தன்மையுடையதாகவும் மாற்றும்.

தயாரிக்கப்பட்ட இந்த கலவையை எலிகள் மற்றும் பெருச்சாளிகள் நடமாடும் இடங்களில் சிறிய சிறிய உருண்டைகளாக வைக்கவும். குறிப்பாக, உணவுப்பொருட்கள் வைக்கும் இடங்களுக்கு அருகிலும், அவை ஒளிந்துகொள்ளக்கூடிய துளைகளில் வைக்கவும்.இதனை உட்கொள்வதன் மூலம் எலிகள் மற்றும் பெருச்சாளிகள் விரைவில் இறந்துவிடும்.

Advertisment
Advertisements

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: