தை அமாவாசை தர்பணம் பற்றி மிகவும் அற்புதமாக அனிதா குப்புசாமி அவரது யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
Advertisment
இது தொடர்பாக அவர் பேசியதாவது : “ ஒருத்தர் வாழக்கையில், சகல வசதிகளும் கிடைக்கப்பெற்றும், மன நிறைவுடன் வாழ வேண்டும் என்றால் மாதம்தோறும் வருகின்ற அமாவாசை திதி தர்பணம் செய்ய வேண்டும். வருடத்தில் 2 அமாவாசை மிகவும் சிறப்பாகக் கருதப்படுகிறது. ஒன்று தை அமாவாசை, இனியொன்று ஆடி ஆமாவாசை.
இந்த இரண்டு அமாவாசைகளிலும் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து, குல தெய்வ வழிபாடு இரண்டையும் செய்பவர்கள் நன்றாக இருப்பார்கள். நல்ல செல்வம் வேண்டும் , குழந்தை பாக்கியம் வேண்டும் , நல்ல உடல் நிலை வேண்டும் என்று வழிபடுவோம். ஆனால் மன நிறைவோடு வாழ வேண்டும் என்றால் அமாவாசையின் போது பித்ரு வழிபாடை செய்ய வேண்டும்.
எல்லா சாமியை கும்பிட்டபோதும் பிரச்சனையான வாழ்க்கை தொடர்கிறது என்றால், நமக்கு முன்னோர்கள் ஆசிர்வாதம் இல்லாமல் இருக்கும். நமது முன்னோர்கள் ஏன் நாம் நன்றாக வாழ வேண்டாம் என்று நினைக்கப்போகிறாரகள் என்று கேட்டால் அதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் இருக்கும் வரை கவனித்து கொண்டாலும், இறந்த பிறகு அவர்களை நாம் நினைக்காமல் மறந்து இருப்போம். இதனால் நாம் அவர்களுக்கு உணவு வழங்க வேண்டும். நாம் இங்கே கொடுக்கும் தர்பணத்தை அவர்கள் பித்ரு உலகத்தில் சாப்பிடுவார்கள். இது கருடபுராணத்தில் உள்ளது. முன்னோர்களின் பசியும், தாகமும் தாங்கவே முடியாது என்பதால் நாம் உணவு வழங்கி ஆக வேண்டும்.
Advertisment
Advertisement
தர்பணம் கொடுக்காமல் வீட்டில், சாபம் ஏற்படும். இதனால் மகிழ்ச்சி இல்லாமல் இருப்பார்கள். இதனால் இவர்களுக்கு சாபம் ஏற்படும். இப்படி பாதிக்கப்பட்டவர்கள் எல்லா மாதமும் தர்பணம் கொடுக்க வேண்டும்.
நீர் நிலைகளில், தர்பணம் கொடுக்க முயற்சி செய்யலாம். அல்லது வீட்டிற்கு அழைத்து தர்பணம் கொடுக்கலாம். எள்ளும், நீரும் இரைத்து நாம் தர்பணம் செய்யலாம். நம்முடைய முன்னோர்களின் பெயர்களைச் சொல்லி தர்பணம் செய்யலாம்.
தர்பணம் செய்யும் ஆண், தர்பணம் முடிந்து படையலிடும் வரை சாப்பிடக் கூடாது. பெண்கள் காலை உணவு சாப்பிட்ட பின்பு படையிடுவதற்கான வேலைகளை செய்யலாம். படையலில் நாம் யாரை நினைத்து தர்பணம் செய்கிறோமோ அவர்களுக்கு பிடித்த உணவுகளை நாம் வாழையிலையில் வைக்க வேண்டும். என்ன உணவு சமைக்க வேண்டும் என்ற குழப்பம் இருந்தால்,
அகத்துக்கீரை, வாழைக்காய் கறி, வடை பாயாசம் உள்ளிட்டவை இடம்பெற வேண்டும். முன்னோர்கள் படம் இருக்க வேண்டும். அப்படியில்லை என்றால் அவர்கள் பெயர்களை சொல்லவேண்டும். படையல் உள்ள வாழை இலையை சுற்றி முன்று முறை தண்ணீர் ஊற்றி, படையலை முன்னோர்களுக்கு படைக்க வேண்டும்.
இப்படி படைத்த பின்பு, வழிப்போக்கர்களுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டுதான் நாம் சாப்பிட வேண்டும். அப்போதுதான் இந்த தர்பணம் நிறைவு பெறும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news