நம் அன்றாட வாழ்க்கையில் சருமத்தைப் பாதுகாப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்று. இளமையாகவும், பொலிவுடனும் தோற்றமளிக்க நாம் என்ன செய்ய வேண்டும்? இயற்கையான முறையில் சருமத்தைப் பராமரிக்க ஏதேனும் வழிமுறைகள் உண்டா? ரசாயனங்கள் இல்லாத சித்த மருத்துவத்தில் சருமப் பராமரிப்புக்கு வழிகள் இருக்கின்றனவா என்ற கேள்விகள் பலருக்கும் இருக்கும்.
Advertisment
சித்த மருத்துவர் நித்யா சருமப் பராமரிப்புக்கான தினசரி நடைமுறைகளையும், சித்த மருத்துவத்தின் நன்மைகளையும் பற்றி இந்த வீடியோவில் விரிவாக விளக்குகிறார்.
சரும பராமரிப்புக்கு தினந்தோறும் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் இங்கே:
Advertisment
Advertisements
கஸ்தூரி மஞ்சள் மற்றும் மஞ்சிட்டி பொடி
சருமத்தைப் பாதுகாக்கும் மஞ்சள் வகைகளில் கஸ்தூரி மஞ்சள் மிகவும் முக்கியமானது.
குளிப்பதற்கு முன், கஸ்தூரி மஞ்சள் மற்றும் மஞ்சிட்டிப் பொடியை சம அளவு கலந்து எடுத்துக்கொள்ளவும். அத்துடன் இரண்டு துளி தேன் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாகக் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவவும். இது சருமத்தைப் பொலிவாக்குவதோடு, சுருக்கங்கள் (Wrinkles) வராமல் தடுக்கவும் உதவும். இதை தினமும் பின்பற்றுவது நல்லது.
மேக்கப் நீக்கும் முறை
வெளியே சென்று வந்தாலோ அல்லது மேக்கப் போட்டிருந்தாலோ, இரவில் தூங்குவதற்கு முன் அதனை முழுவதுமாக நீக்குவது அவசியம்.
முகத்தை நன்கு கழுவிய பிறகு, சிறிதளவு ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய்யை முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்த பின்னரே உறங்கச் செல்ல வேண்டும். மேக்கப்புடன் உறங்குவது தொற்றுநோய்களுக்கும், கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் தோன்றவும் வழிவகுக்கும்.
ஆவி பிடித்தல்
வாரத்திற்கு மூன்று முறையாவது முகத்திற்கு ஆவி பிடிப்பது நல்லது. இது சருமத் துளைகளைத் திறந்து, சருமத்தை மிகவும் சுத்தமாகவும் தெளிவாகவும் வைத்திருக்க உதவும்.
இந்த எளிய சித்த மருத்துவப் பராமரிப்பு முறைகளைப் பின்பற்றுவதன் மூலம், இரசாயனங்கள் இல்லாத ஆரோக்கியமான மற்றும் பொலிவான சருமத்தைப் பெறலாம்.