/indian-express-tamil/media/media_files/2025/08/22/anuradha-2025-08-22-17-54-24.jpg)
Anuradha Sriram
சினிமா உலகில் பிஸியாக இருக்கும் பாடகர்கள், இசையமைப்பாளர்களின் எதிர்பாராத நேரத்தில் வரும் அழைப்புகளுக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட ஒரு சூழலில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி அனுராதா ஸ்ரீராம், தனது மாமனார், மாமியார் அவருக்கு ஒரு பெரிய ஆதரவாக இருந்ததை அவள் விகடன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
“எனக்குக் கிடைச்ச மிகப்பெரிய வரப்பிரசாதம் என்னோட மாமனார், மாமியார். ஏ.ஆர்.ரஹ்மான் சார் ரெக்கார்டிங்ன்னா, நேரம் காலம் பார்க்க முடியாது. விடிய விடிய வேலை இருக்கும். அப்படி வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்தா, களைப்பாத்தான் இருக்கும். ஆனா, நம்ம அம்மா, அப்பா சொல்லிக் கொடுத்த நல்ல பழக்கங்கள் இருக்கு. நான் திருமணமான புதுசுல எங்க மாமனார், மாமியார் சென்னையில வீட்டுல வந்து தங்குவாங்க. வழக்கமா, அதிகாலை நாலு மணிக்கு எழுந்து, எல்லா வேலைகளையும் முடிச்சிட்டுதான் ரெக்கார்டிங்குக்குக் கிளம்புவேன். மாமனார், மாமியாருக்கு டிபன், சாப்பாடு எல்லாம் செஞ்சு வச்சிட்டுத்தான் போவேன்.
ஒருநாள், எங்க மாமனார் என்னை கூப்பிட்டு, "என் மனைவி நல்லா சமைப்பாங்க. நீ எதுக்கு இவ்ளோ கஷ்டப்படற? நீ அதிகாலையிலேயே வேலைக்குக் கிளம்பற. உனக்கு ஏழு மணிநேரம் தூக்கம் அவசியம். நீ நல்லா தூங்கினாதான் திறம்பட வேலை செய்ய முடியும். நீ ஓய்வெடு, என் மனைவி சமைப்பா"ன்னு சொன்னார். யார் இப்படி சொல்லுவாங்க.
இந்த காலத்துல இப்படி ஒரு மாமனார் கிடைக்கிறது பெரிய வரம். அந்த நாள்ல இருந்து அவங்க எனக்குக் கொடுத்த ஆதரவு, என் இசைப் பயணத்துக்குப் பெரிய பலமா அமைஞ்சிருக்கு,” என்று அனுராதா ஸ்ரீராம் அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.