Advertisment

செம்ம ருசியான ஆப்பம் இப்படி செய்து பாருங்க

வெறும் அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகிய மூன்று பொருட்களை மட்டுமே சேர்த்து ஆப்பம் செய்ய உள்ளோம். அதன் ரெசிபி இதோ.

author-image
WebDesk
New Update
ஆப்பம்

ஆப்பம்

வெறும் அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகிய மூன்று பொருட்களை மட்டுமே சேர்த்து ஆப்பம் செய்ய உள்ளோம். அதன் ரெசிபி இதோ.

Advertisment

 

தேவையான பொருட்கள்:-

 இட்லி அரிசிஒரு கப்

 பச்சரிசிஒரு கப்

 உளுந்துஒரு கப்

 வெந்தயம்ஒரு டீஸ்பூன்.

 செய்முறை விளக்கம்முதலில் 1 கப் இட்லி அரிசி மற்றும் பச்சரிசி எடுத்துக்கொள்ளவும். இவற்றை தண்ணீரில் நன்கு அலசி வைத்துக்கொள்ளவும்.பிறகு இவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அவற்றுடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு வெந்தயம் மற்றும் உளுந்து சேர்த்து நன்கு ஊற வைத்துக் கொள்ளவும்.

 அரிசி மற்றும் உளுந்தை தனித்தனியாக தான் ஊற வைக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும். பிறகு அரைக்கும் போது அவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.இவை சுமார் 4 மணி நேரம் ஊறிய பின்னர், கிரைண்டரில் முதலில் உளுந்தை சேர்த்து அரைக்கவும். பொங்க பொங்க தண்ணீரை தெளித்து தெளித்து ஆட்டிக் கொள்ளவும்.

 உளுந்து முக்கால் பாகம் நன்கு அரைபட்ட பிறகு அரிசியை சேர்த்துக் கொள்ளவும். இவை இரண்டும் நன்கு அரைப்பட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.எந்த அளவிற்கு மாவு நைஸாக அரைக்கிறோமோ அந்த அளவிற்கு ஆப்பம் மெத்தென்று மிருதுவாக வரும்.இவற்றை நன்கு அரைத்த பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

 8 மணி நேரம் மாவு ஊறி நன்கு புளித்து பொங்கி வரும் மாவை ஆப்ப கடாயில் இட்டு, மெத்தென்று சூப்பரான மற்றும் சுவையான ஆப்பம் யார் செய்யவும். இந்த அட்டகாசமான ஆப்பத்தை உங்களுக்கு பிடித்த சைடிஸ்களுடன் சேர்த்து உண்டு மகிழவும்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment