கால் ஆணி இருக்கும் இடத்தில் வெங்காயம் வைத்து இப்படி கட்டுங்க… எளிய வீட்டு வைத்தியம் இதுதான்; டாக்டர் ராஜலெட்சுமி
கால் ஆணி (Corns) பிரச்னைகளால் வலியுடனும் சிரமத்துடனும் பெரும்பாலானோர் வாழ்கின்றனர். பலர் இதற்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு என்று நம்புகின்றனர். எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம், அறுவை சிகிச்சை இல்லாமல் இந்தப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.
கால் ஆணி (Corns) பிரச்னைகளால் வலியுடனும் சிரமத்துடனும் பெரும்பாலானோர் வாழ்கின்றனர். பலர் இதற்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு என்று நம்புகின்றனர். எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம், அறுவை சிகிச்சை இல்லாமல் இந்தப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.
கால் ஆணி இருக்கும் இடத்தில் வெங்காயம் வைத்து இப்படி கட்டுங்க… எளிய வீட்டு வைத்தியம் இதுதான்; டாக்டர் ராஜலெட்சுமி
கால் ஆணி (Corns) பிரச்னைகளால் வலியுடனும் சிரமத்துடனும் பெரும்பாலானோர் வாழ்கின்றனர். பலர் இதற்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு என்று நம்புகின்றனர். எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம், அறுவை சிகிச்சை இல்லாமல் இந்தப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.
Advertisment
கால் ஆணி என்றால் என்ன?
கால் ஆணி (Foot Corns or Calluses) என்பது பாதங்களில் ஏற்படும் பொதுவான தோல் பிரச்னை. இது அதிக அழுத்தம் அல்லது உராய்வு காரணமாக தோலின் ஒரு பகுதி கடினமாகி, தடித்துப்போகும் நிலையாகும். இதை கார்ன் (Corn) அல்லது காலஸ் (Callus) என்றும் அழைக்கிறார்கள்.
எப்படி ஏற்படுகிறது? கால் ஆணி ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. இறுக்கமான காலணிகள், நீண்ட நேரம் அணியப்படும் ஹீல்ஸ் (high heels) போன்ற காலணிகள் பாதத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் அதிக அழுத்தம் மற்றும் உராய்வை ஏற்படுத்துகின்றன. நீண்ட நேரம் நின்று கொண்டே வேலை செய்பவர்களுக்கு பாதங்களில் அழுத்தம் அதிகரித்து கால் ஆணி வரலாம். உடல் பருமன் அதிகரிப்பதும் பாதங்களில் அதிக அழுத்தத்தை உண்டாக்கி, கால் ஆணிக்கு வழிவகுக்கும். சரியாக நடக்காதது அல்லது பாதங்களை தவறாக வைப்பது போன்றவையும் காரணங்களாக இருக்கலாம். வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு தோல் இறுகி, கடினமாவதால் கால் ஆணி வர வாய்ப்புள்ளது. சில சமயங்களில் கிருமித் தொற்றுகள் அல்லது ஒவ்வாமைகளாலும் கால் ஆணி ஏற்படலாம்.
Advertisment
Advertisements
அறிகுறிகள்: கால் ஆணி பெரும்பாலும் பாதங்களின் அடிப்பகுதியில், விரல்களுக்கு இடையில் அல்லது பெருவிரலின் அருகே ஏற்படும். சிறிய அளவில் இருந்தாலும், ஆரம்பத்தில் பாதத்தை தரையில் ஊன்றும்போது அல்லது காலணிகள் அணியும்போது அழுத்தம் கொடுத்து வலியை ஏற்படுத்தும். இதனைக் கவனிக்காமல் விட்டால், வலி அதிகரித்து பாதத்தை தரையில் ஊன்ற முடியாத அளவுக்கு கடுமையானதாக மாறக்கூடும்.
கால் ஆணி என்பது பெரிய பிரச்னை அல்ல, இதை வீட்டிலேயே அல்லது எளிய மருத்துவ முறைகள் மூலம் சரிசெய்யலாம். தடுக்க, சரியான அளவுள்ள, மென்மையான காலணிகளை அணிவது, நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்ப்பது, மற்றும் பாதங்களை சுத்தமாகவும் ஈரப்பதமாகவும் வைத்துக்கொள்வது அவசியம்.
எளிய வீட்டு வைத்தியங்கள்:
ஆமணக்கு எண்ணெய் பாதக் குளியல் (Castor Oil Foot Soak): ஒரு அகலமான பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொள்ளவும். அதில் சில துளிகள் ஆமணக்கு எண்ணெய் சேர்க்கவும். உங்கள் பாதங்களை 15 நிமிடங்கள் இந்த நீரில் ஊறவைக்கவும். ஊறிய பிறகு, ஒரு பியூமிஸ் கல் (pumice stone) அல்லது மென்மையான பிரஷ்ஷைப் பயன்படுத்தி, கார்ன் அல்லது ஆணி உள்ள பகுதியை மெதுவாகத் தேய்க்கவும். இது கடினமான தோலை மென்மையாக்க உதவும்.
எலுமிச்சை சாறு (Lemon Application): கால் ஆணி உள்ள இடத்தில் எலுமிச்சை சாற்றை தடவி, மெதுவாகத் தேய்க்கவும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த முறையைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் எலுமிச்சை சாறு புண்கள் அல்லது காயங்களை ஏற்படுத்தக்கூடும்.
வெங்காயம் (Onion or Garlic Paste): சர்க்கரை நோயாளிகள் கால் ஆணி உள்ள இடத்தில் நசுக்கிய வெங்காயம் அல்லது பூண்டு பசையைப் பயன்படுத்தலாம். இந்தப் பசையை ஆணி உள்ள இடத்தில் தடவி, இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடவும். இந்த முறை ஆணியை மென்மையாக்கி, நாளடைவில் தானாகவே உதிர்ந்து விழ உதவும்.
கடுகை பயன்படுத்தி கால் ஆணியை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். பாத்திரத்தில் விளக்கெண்ணெய் எடுக்கவும். இதனுடன் வறுத்து பொடி செய்த கடுகு, மஞ்சள் பொடி சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை ஆறவைத்து வடிகட்டி எடுத்து வைக்கவும். இரவு நேரத்தில் தூங்க போகும் முன்பு கால்களை சுத்தப்படுத்தி இந்த தைலத்தை தடவினால், கால் ஆணி குணமாகும்.
கால் ஆணி ஏற்பட்ட உடனேயே பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரவும். இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டு விட்டு காலையில் எடுத்துவிடலாம். வேப்பிலை இலை பசை, குப்பைமேனி இலை பசையுடன் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக கலந்து கால் ஆணி, உள்ளங்கை தடித்திருந்தால் அந்த இடத்தில் இந்த பசையை வைத்து துணியால் இரவு முழுவதும் கட்டி வைத்தால் கால் ஆணி பிரச்சனை சரியாகும். இஞ்சிச் சாற்றுடன் சிறிதளவு நீர்த்த சுண்ணாம்பைக் கலந்து கால் ஆணிக்கு மருந்தாக போட்டு வந்தால் கால் ஆணி நீங்கி விடும். 5 கிராம் மஞ்சள், 5 கிராம் வசம்பு, கைப்பிடி அளவு மருதாணி இலைகள் ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து, கால் ஆணி உள்ள இடத்தில் அடைபோல் கனமாக வைத்து மேலே ஒரு வெற்றிலையை வைத்து, துணியினால் இறுகக் கட்டி விட வேண்டும். படுக்கும் முன்பு இதை செய்யவதால், கால் ஆணி இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும் என்கிறார் டாக்டர் ராஜலெட்சுமி.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.