/indian-express-tamil/media/media_files/2025/06/21/dullness-and-brighten-2025-06-21-11-21-45.jpg)
தயிரில் இந்த பொடி சேர்த்து அப்ளை பண்ணுங்க... மங்கு நீங்கி முகம் பொலிவாகும்; டாக்டர் நித்யா
முகம், கழுத்து, தோள்கள், கைகளில் பழுப்பு அல்லது லேசான கருப்பு நிற படைகள் போன்று படர்வதையே மங்கு என அழைக்கிறோம். இது ஒருவரின் சருமத்தில் பழுப்பு நிற படைகள் போல் இருப்பதால், சூரிய வெப்பத்தில் ஏற்பட்ட தழும்புகள் என பலரும் தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் இதுபோல் மங்குகள் வருவதற்கு பலவித உடல்நலக் கோளாறுகள் காரணமாக இருக்கலாம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
மெலஸ்மா, தமிழில் "மங்கு" என்று அழைக்கப்படுகிறது, இது ஒரு பொதுவான தோல் பிரச்சினை ஆகும், குறிப்பாக 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு இது வருகிறது. மெலஸ்மா என்பது முகத்தில் அடர் பழுப்பு நிற திட்டுகளாக தோன்றும். மூக்கு, கன்னம் அல்லது நெற்றியில் இது அடிக்கடி காணப்படும். சாதாரண பரு அடையாளங்கள் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களில் மறைந்துவிடும், ஆனால் மெலஸ்மா சருமத்தின் மேலோட்டமான அடுக்கில் தெரியும்.
மெலஸ்மா வருவதற்கான காரணங்கள்:
ஹார்மோன் மாற்றங்கள் இது மாதவிடாய் காலத்தில் பொதுவானது. தைராய்டு பிரச்னைகள் குறிப்பாக, ஹைப்போ தைராய்டிசம் பல பெண்களுக்கு ஒரு முக்கிய காரணம். உடலில் நச்சுகள் & மலச்சிக்கல் போது நச்சுகள் மற்றும் அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுவது மெலஸ்மாவுக்கு வழிவகுக்கும். அதிக மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் தூக்கமின்மை இந்த நிலையைத் தூண்டும். இறந்த சரும செல்கள் முகத்தில் படிதல். ரத்தத்தில் நச்சுகள் அல்லது உயர்ந்த இரத்த சர்க்கரை அளவும் காரணமாக இருக்கலாம். நீண்ட கால மருந்து பயன்பாடு சில நேரங்களில் மெலஸ்மாவை பக்க விளைவுகளாக ஏற்படுத்தும்.
மெலஸ்மாவிற்கான வீட்டு வைத்தியம்:
எலுமிச்சை சாறு, ஒரு கைப்பிடி புதினா மற்றும் சில துளசி இலைகளை 300 மில்லி தண்ணீரில் கலந்து குடிக்கவும். இதை தினமும் குடித்து வந்தால் இறந்த சரும செல்களை நீக்கி, சருமத்தை மென்மையாக்கும்.
உடலில் உள்ள நச்சுகளை அகற்ற, அரை ஸ்பூன் நெல்லிக்காய் தூள் மற்றும் 3 சிட்டிகை மஞ்சள் தூள் ஆகியவற்றை 200 மில்லி வெதுவெதுப்பான நீரில் கலக்கவும். இதை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை குடிக்கவும். நெல்லிக்காய் இரத்த அசுத்தங்களை நீக்கும்.
மூலிகை பேஸ் பேக்: சம பாகங்களில் இந்த தூள் கலவையை பயன்படுத்தி பேஸ் பேக் தயாரிக்கவும். மஞ்சிஸ்தா தூள், அவரம்பூ தூள், ஆரஞ்சு தோல் தூள், பச்சை பயறு மாவு, வசம்பு இந்த தூள் கலவையை தயிர், தக்காளி சாறு, ரோஸ் வாட்டர் மற்றும் சாதாரண நீர் சேர்த்து பேஸ்ட் செய்து முகம் மற்றும் கழுத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவவும். இந்த பேக் கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களையும், கழுத்தில் உள்ள கருமையையும் போக்க உதவும்.
நீண்ட காலமாக மெலஸ்மா உள்ளவர்களுக்கு, சித்த மருத்துவத்தில் "ரத்தசுத்தி சூரணம்" போன்ற குறிப்பிட்ட சிகிச்சைகள் உள்ளன, இது உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது மற்றும் அரிப்பு, சொறி மற்றும் வறட்சி போன்ற சிறிய தோல் பிரச்னைகளை சரி செய்கிறது என்கிறார் டாக்டர் நித்யா.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.