/indian-express-tamil/media/media_files/2025/06/16/o0d6EeBnDLb99Xf6x4is.jpg)
மல்லிகை செடி இலை மஞ்சள் கலரில் இருக்கா? வீட்டில் இருக்கும் இந்த பொருள் போதும்... சூப்பரா பூக்கச் செய்யலாம்!
மல்லிகை செடிகளை எப்படி அதிக பூக்கள் பூக்க வைப்பது? செடிகளில் இரும்புச்சத்து குறைபாட்டை நீக்குவது? தேயிலை கழிவுகளை உரமாக பயன்படுத்துவது பற்றி சுதாகர் கிருஷ்ணன் என்ற யூடியூப் சேனலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
இரும்புச்சத்து குறைபாடு: மல்லிகை செடியின் இலைகள் மஞ்சளாகவும், நரம்பு பச்சையாகவும் இருந்தால், அது இரும்புச்சத்து குறைபாட்டைக் குறிக்கிறது. இந்த குறைபாடு இருந்தால், செடிக்கு உரம் போட்டாலும் சத்துக்களை உறிஞ்ச முடியாது.
வாழைப்பழத்தோல் கரைசல்: வாழைப்பழத்தோல் பயன்படுத்தி இரும்புச்சத்து கரைசலை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம். ஒரு பச்சை வாழைப்பழத்தை 3 துண்டுகளாக வெட்டவும். வாழைப்பழத் துண்டுகளை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். வாழைப் பழம் முக்கால் பாகம் வெந்தால் போதும். அதனை எடுத்துவிட்டு, அந்த தண்ணீரை ஆற வைக்கவும். இதுதான் இரும்புச்சத்து கரைசல். ஆறிய பிறகு, வாழைப்பழ தண்ணீரை சாதாரண தண்ணீருடன் 1:2 என்ற விகிதத்தில் கலக்கவும் (1 பங்கு வாழைப்பழ தண்ணீர், 2 பங்கு சாதாரண தண்ணீர்). இந்த கரைசலை இலைகளில் தெளிக்கலாம் மற்றும் செடியின் அடிப்பகுதியில் ஊற்றலாம்.
தேயிலை கழிவு உரம்: இரும்புச்சத்து குறைபாட்டை சரி செய்த பிறகு, தேயிலை கழிவுகளை உரமாக பயன்படுத்துவது பற்றி பார்க்கலாம். தேயிலை தயாரிக்கும்போது சர்க்கரை சேர்க்கக்கூடாது. பயன்படுத்திய தேயிலை இலைகளில் உள்ள பால் தன்மையை முழுமையாக நீக்க நன்கு கழுவ வேண்டும். தேயிலை இலைகளை சூரிய ஒளியில் நன்கு உலர்த்த வேண்டும். இதனால் பூஞ்சை மற்றும் பூச்சிகள் வராது. ஒரு செடிக்கு 2 ஸ்பூன் உலர்ந்த தேயிலை கழிவுகளை 15 நாட்களுக்கு ஒருமுறை கொடுக்கலாம். தேயிலை கழிவுகளை செடியின் மண்ணில் கலக்கவும். தேயிலை கழிவுகளில் உள்ள டானிக் அமிலம் மண்ணின் pH அளவை சரிசெய்து அதிக பூக்களை பூக்க உதவும். இந்த உரம் வெயில் காலங்களில் மிகவும் சிறந்தது. காய்கறி செடிகளுக்கு, இதை மாதத்திற்கு ஒருமுறை மற்ற உரங்களுடன் (எரு அல்லது மண்புழு உரம்) சேர்த்து பயன்படுத்தலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.