/indian-express-tamil/media/media_files/My9sUFachehUxCAW6P13.jpg)
ஒரு நோட்டும் பேனாவும் போதும் ஆஷாட நவராத்திரியில் வாராகி அம்மனை வழிபாடு செய்யலாம்.
ஆஷாட நவராத்திரி வழிபாடு ஜூலை 6-ம் தேதி முதல் தொடங்கி 9 நாட்கள் நடைபெறுகிறது. இந்த ஆஷாட நவராத்திரி வழிபாட்டு முறை பற்றி தெரிந்துகொண்டு வழிபடுங்கள். ஒரு நோட்டும் பேனாவும் போதும் ஆஷாட நவராத்திரியில் வாராகி அம்மனை வழிபாடு செய்யலாம்.
இந்த ஆண்டு ஆஷாட நவராத்திரி ஜூலை 6-ம் தேதி சனிக்கிழமை தொடங்கி 9 நாட்கள் வழிபாடு செய்யப்படுகிறது. ஆஷாட நவராத்திரியில் வாராகி அம்மனை வழிபாடு செய்ய முதலில் ஒரு அணையா விளக்கு ஏற்ற வேண்டும். அதாவது, ஜூலை 6 முதல் ஜூலை 15-ம் தேதி வரை ஒரு அணைய விளக்கு ஏற்ற வேண்டும்.
பிறகு, சரியாக இரவு 9 மணிக்கு வாராகி அம்மனை மனதில் நினைத்துக்கொண்டு, ஒரு புது நோட்டு பேனா எடுத்துக்கொள்ளுங்கள், உங்கள் வேண்டுதலை அந்த நோட்டில் எழுதி வாருங்கள். ஆஷாட நவராத்திரியில் இப்படி வேண்டிக்கொண்டு வழிபட்டால், நிச்சயமாக வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை. நீங்களும் ஆஷாட நவராத்திரியில் வழிபாடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? ஒரு நோட்டு பேனா போதும். இன்றே உங்கள் வேண்டுதலை எழுதுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.