/indian-express-tamil/media/media_files/T9HLW1Vpck0ouQMavA9Q.jpg)
உணவுக் கலப்படத்தைச் சுற்றியுள்ள சமீபத்திய செய்திகளின் வெளிச்சத்தில், மக்கள் தாங்கள் எதை உட்கொள்கிறார்கள் மற்றும் அது அவர்களின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றி அதிக கவலைப்படுகிறார்கள்.
கோதுமை மாவில் (ஆட்டா) கல் தூள்கள் கலக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் உணவியல் நிபுணர் தீபலட்சுமி கூறுகையில், “அலபாஸ்டர், ஒரு கனிம மற்றும் செதுக்கப் பயன்படுத்தப்படும் மென்மையான பாறை மற்றும் கல் தூள்கள் மாவில் (கலப்படம்) கலக்கப்படுகிறது. இது மனிதர்கள் சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல . இருப்பினும், யாராவது இதை உட்கொண்டால், பாதிப்பை ஏற்படுத்தும்.
மலச்சிக்கல், வயிற்றில் அசௌகரியம், வீக்கம் போன்ற உடல்நல அபாயங்களை ஏற்படுத்தலாம் மற்றும் உணர்திறன் போன்ற பல் பிரச்சனைகளும் ஏற்படலாம், ஏனெனில் கல்லின் தன்மை பல்லின் பற்சிப்பியை சேதப்படுத்தும் என்று கூறினார்.
ஆங்கிலத்தில் படிக்க: Is your atta flour a victim of stone powder adulteration? Dietitian reveals long term health impact and what to replace it with
கலப்படத்தை கண்டறிவது எப்படி?
தீபலட்சுமி கூறுகையில், கல் தூள் கலப்படத்தை வண்டல் சோதனை (sedimentation) மூலம் சரிபார்க்கலாம், அதற்கு நீங்கள் ஒரு தேக்கரண்டி இந்த மாவை எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு, கிளறி காத்திருக்கவும். இப்போது கல் தூள் இருந்தால் அது கீழே தக்கி இருக்கும்.
தீபலட்சுமி மற்றொரு வழியை கூறுகிறார் - வினிகர் சோதனை செய்து பார்க்கலாம் என்றார். அதற்கு நீங்கள் கோதுமை மாவையும் தண்ணீரையும் கலந்து, சிறிது வினிகரை சேர்க்கலாம். "அது பிரிந்துவந்தால், தயாரிப்பு கலப்படம்" என்று பொருள் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us