Advertisment

ஆயுத பூஜை 2021: தேதி, சுப நேரம், பூஜையின் முக்கியத்துவம்

Ayudha Pooja 2021 know date time significance Tamil News இந்த ஆண்டு, ஆயுத பூஜை அக்டோபர் 14, 2021, வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.

author-image
WebDesk
Oct 14, 2021 16:52 IST
Ayudha Pooja 2021 know date time significance Tamil News

Ayudha Pooja 2021 know date time significance Tamil News

Ayudha Pooja 2021 know date time significance Tamil News : 2021 நவராத்திரியின் ஒன்பது நாட்கள் நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. 2021 நவராத்திரியின் சிறப்பு விழாக்களில் துர்கா பூஜை, கன்யா பூஜன், மகா நவமி மற்றும் துர்கா அஷ்டமி ஆகியவை அடங்கும். இந்த பண்டிகைகளில், ஆயுத பூஜை என்பது கருவிகளுக்கு அர்ப்பணிக்கப்படும் தனித்துவமான நாள். அந்த வகையில் மக்கள் இன்று தங்கள் கருவிகளை சுத்தம் செய்து, பூஜையிட்டு கொண்டாடுவதற்குத் தயார் நிலையில் உள்ளனர்.

Advertisment

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், இந்த பூஜை அஸ்திர பூஜை, சாஸ்திர பூஜை மற்றும் பலவற்றில் வித்தியாசமாக அழைக்கப்படுகிறது. செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் வரும் அஸ்வினி மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் பத்தாவது நாளில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, ஆயுத பூஜை அக்டோபர் 14, 2021, வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.

ஆயுத பூஜை 2021: தேதி மற்றும் நேரம்

ஆயுத பூஜை விஜய முகூர்த்தம் 14:02 முதல் 14:48 வரை

நவமி திதி தொடங்கும் நேரம் - அக்டோபர் 13, 20:07 மணி

நவமி திதி முடிவடையும் நேரம் - அக்டோபர் 14, 18:52 மணி

சூரிய உதயம் 06:21

சூரிய அஸ்தமனம் 17:52

ஆயுத பூஜை 2021: முக்கியத்துவம்

ஆயுத பூஜை தென்னிந்தியாவில் முக்கியமாகக் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பிரபலமாகக் கொண்டாடப்படுகிறது. இது மகா நவராத்திரியின் போது வருகிறது. இந்த பண்டிகை ஆயுத பூஜைக்காக முன்பு .கொண்டாடப்பட்டது. ஆனால், தற்போது அனைத்து கருவிகளும் வணங்கப்படுகின்றன. கைவினைஞர்கள் தங்கள் கருவிகள் மற்றும் கருவிகளை இந்நாளில் வணங்குகிறார்கள்.

கருவிகள் அனைவரின் அன்றாட வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதி. எனவே, கருவிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. நவீனக் காலங்களில் இந்த பூஜை வாகன பூஜையாக கடைப்பிடிக்கப்பட்டு வாகனங்களையும் வழிபடுகின்றனர். வாகனங்கள் பூக்கள், மாலைகள் மற்றும் மண்பாண்டங்களால் அலங்கரிக்கப்பட்டு வழிபடப்படுகின்றன.

நல்ல செயல்திறன், முடிவுகள் மற்றும் சரியான வெகுமதிகளுக்குப் பின்னால் ஒரு தெய்வீக சக்தி செயல்படுகிறது என்ற நம்பிக்கையுடன் பக்தர்கள் இந்த நாளில் வழிபடும்போது ஆயுதங்கள் மற்றும் கருவிகள், கடவுளால் ஆசீர்வதிக்கப்படுகின்றன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Ayudha Puja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment