காலையில் எழுந்ததும் ஒரு டீஸ்பூன் நெய்.. ஆயுர்வேதம் சொல்லும் ரகசியம்

பசுவின் பாலில் தயாரிக்கப்படும், நெய்யில் புரதம், ஆக்ஸிஜனேற்றிகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் தாதுக்கள் உள்ளன

பசுவின் பாலில் தயாரிக்கப்படும், நெய்யில் புரதம், ஆக்ஸிஜனேற்றிகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் தாதுக்கள் உள்ளன

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ghee health benefits

Ghee health benefits

நெய் ஒரு பழமையான அதிசய மருந்து, இது இந்திய சமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. தினமும் அதிகாலையில் ஒரு சிறிய அளவிலான நெய் உட்கொள்வது, மிகவும் பொதுவான உடல்நலப் பிரச்சினைகளை சரிசெய்யும் என்று ஆயுர்வேத வல்லுநர்கள் நம்புகிறார்கள். நெய், ஏன் குணப்படுத்தும் ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது என்பது இங்கே!

நெய் பற்றி ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?

Advertisment

ஆயுர்வேத நிபுணர்களின் கூற்றுப்படி, தினமும் காலையில் நெய் உட்கொள்வது, உடலின் உயிரணுக்களுக்கு ஊட்டமளிக்கும் ஆதாரமாக செயல்படுகிறது மற்றும் செல் சேதத்தை மாற்றியமைக்க உதவுகிறது, குணப்படுத்துவதை ஊக்குவிக்கிறது.

நெய்யில்’ பியூட்ரிக் அமிலம் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் இருப்பதால், பிடிவாதமான கொழுப்பை உடல் அமைப்பிலிருந்து வெளியேற்றி, நல்ல கொழுப்பை ஊக்குவிக்கிறது.

இது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. இருப்பினும், பலன்களைப் பெறுவதற்கு மிகக் குறைந்த அளவில் இதை உட்கொள்வது அவசியம், அதிகளவு நெய்யில், நிறைவுற்ற கொழுப்புகள் இருப்பதால் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.

ஏன் ஒரு நாளை நெய்யுடன் தொடங்க வேண்டும்?

Advertisment
Advertisements
publive-image
தினசரி உணவில் எதையும் சேர்ப்பதற்கு முன், மருத்துவ வழிகாட்டுதலைப் பெற அறிவுறுத்தப்படுகிறது

பசுவின் பாலில் தயாரிக்கப்படும், நெய்யில் புரதம், ஆக்ஸிஜனேற்றிகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் தாதுக்கள் உள்ளன, இது அதிகாலையில் ஒரு மருந்தாக உட்கொள்ளும்போது, உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்குகிறது, உடலின் செல்களை புத்துயிர் பெறச் செய்கிறது.

செரிமான செயல்பாட்டின் போது சிறுகுடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை மேம்படுத்துவதற்கு அதிகாலையில் ஒரு சிறிய அளவு நெய் சிறந்தது.

நெய்’ இரைப்பைக் குழாயின் அமில pH அளவைக் குறைக்கிறது என்று நம்பப்படுகிறது. சிறந்த செரிமானம், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது, மலமிளக்கியாக செயல்படுகிறது மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

காலை பானத்தில் நெய்யைச் சேர்ப்பது அல்லது மஞ்சளுடன், நெய் சேர்த்து சாப்பிடுவது ஃப்ரீ ரேடிக்கல்கள் இருப்பதால் ஏற்படும் சேதமடைந்த செல்களை மீண்டும் உருவாக்க உதவுகிறது.

நெய்சேர்க்கசரியானவழிஎன்ன?

நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு டீஸ்பூன் நெய்யை, ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீருடன் உட்கொள்வது உடலுக்கு ஒரு டானிக் போல வேலை செய்கிறது. இது நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது, இயற்கையான மலமிளக்கியாக செயல்படுகிறது மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

நெய் கால்சியம் மற்றும் அமினோ அமிலங்களின் சிறந்த மூலமாகும், இது எலும்பு மற்றும் பல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தவும், எடையை நிர்வகிக்கவும் உதவுகிறது.

பச்சை மஞ்சளுடன், நெய் சேர்த்து சாப்பிடும் போது, இது ஒரு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானமாக அமைகிறது. இது ஒரு வைரஸ் தடுப்பு கலவையாகவும் செயல்படுகிறது, இது தொண்டை புண், சளி இருமல், காய்ச்சலுக்கு ஏற்றது.

இருப்பினும், தினசரி உணவில் எதையும் சேர்ப்பதற்கு முன், மருத்துவ வழிகாட்டுதலைப் பெற அறிவுறுத்தப்படுகிறது, ஏனெனில் நெய்யில் நிறைவுற்ற கொழுப்புகள் இருப்பதால், மிதமாக எடுத்துக் கொள்ளாவிட்டால், இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: