குளிர்காலத்தில்’ வெப்பநிலை குறையும் போது பலர் சளி, தொண்டை புண் மற்றும் இருமல் போன்ற பருவகால பிரச்சனைகளை அனுபவிக்கின்றனர்.
குறிப்பாக நாடு முழுவதும் ஒமிக்ரான் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற வைரஸ் தொற்றுகளிலிருந்து, தன்னைப் பாதுகாத்துக் கொள்ள சூடான ஆடைகளை அணிந்தால் மட்டும் போதாது.
எனவே, ஆயுர்வேத மருத்துவர் டிக்ஸா பவ்சர் உங்களுக்கு சளி மற்றும் இருமல் வராமல் தடுக்க, சில பயனுள்ள வைத்தியங்களை இன்ஸ்டாவில் சமீபத்தில் பகிர்ந்து கொண்டார்.
"பருவகால இருமல் மற்றும் சளி உங்கள் உடல்நலத்தை மட்டுமல்லாமல், மன ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. எனவே சாத்தியமான எல்லா வழிகளிலும் அதைத் தடுப்பது நல்லது. ஜலதோஷம் மற்றும் இருமல் தாக்குதலைத் தடுக்க "குளிரை அதிகரிக்கும் காரணிகளைத் தவிர்க்க வேண்டும்" என்று மருத்துவர் பாவ்சர் பரிந்துரைத்தார்.
ஒரு சில உதாரணங்கள்:
குளிர்ந்த, கார்பனேற்றப்பட்ட பானங்களைத் தவிர்க்கவும், ஏனெனில் அவற்றில் ஏற்கனவே அதிகளவு சர்க்கரை மற்றும் காஃபின் உள்ளது.
சளி மற்றும் இருமல் வராமல் தடுக்க, தயிர் குறிப்பாக பழங்களுடன் கலந்து சாப்பிடுவதை தவிர்க்கவும்.
ஐஸ்கிரீம்கள், சர்க்கரை உணவு, வறுத்த உணவுகள், அனைத்து வகையான ஜங்க் உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான, சீரான உணவை உண்ணுங்கள்.
ஆயுர்வேதத்தின்படி பகலில் தூங்குவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. அதேபோல, இரவில் அதிகாலை வரை விழித்திருப்பதும் பரிந்துரைக்கப்படவில்லை என்று மருத்துவர் பவ்சர் கூறினார்.
நீங்கள் ஏற்கனவே சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்களுக்கு உதவ சில ஆயுர்வேத வைத்தியங்களை அவர் பரிந்துரைத்தார். இங்கே பாருங்கள்:
7-8 துளசி இலைகள், ஒரு சிறிய துண்டு - இஞ்சி, பூண்டு - சில பற்கள், 1 தேக்கரண்டி ஓமம், 1 தேக்கரண்டி வெந்தயம், மஞ்சள் (உலர்ந்த அல்லது புதியது) மற்றும் 4-5 கருப்பு மிளகு ஆகியவற்றை 1 லிட்டர் தண்ணீரில், அது பாதியாக குறையும் வரை கொதிக்க வைக்கவும். காலையில் அதை முதலில் குடிக்கவும்.
குளிப்பதற்கும், குடிப்பதற்கும் குளிர்ந்த நீரை பயன்படுத்த வேண்டாம்.
செரிமான செயல்பாட்டை மேம்படுத்த சூடான நீரைக் குடிக்கவும்.
தேன் சாப்பிடுங்கள், அது உங்கள் தொண்டையை ஆற்ற உதவும்.
இஞ்சி, மஞ்சள் மற்றும் எலுமிச்சை சேர்த்த தேநீர் குடிக்கவும்.
நீராவி பிடியுங்கள்- நீராவி பிடிக்க வேகவைத்த தண்ணீரில் சிறிது அஜ்வைன், யூகலிப்டஸ் எண்ணெய் அல்லது மஞ்சள் சேர்க்கவும்.
வெதுவெதுப்பான பாலுடன், மஞ்சள் சேர்த்து குடிக்கவும்.
தொண்டை புண் இருந்தால் அதிமதுரம் அல்லது மஞ்சள் மற்றும் கல் உப்பு சேர்த்து வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளிக்கவும்.
துளசி இலைகளை மெல்லுங்கள்.
ஆயுர்வேத கஷாயங்களை குடிக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“