வாய் துர்நாற்றம் அதிகமா இருக்கா? கல்லீரலை கவனிங்க; எச்சரிக்கும் டாக்டர் ஜெயரூபா

நன்றாக பல் துலக்கியும், வாய் துர்நாற்றம் தீரவில்லையா? காலை பல் துலக்கியதும் அதனால் ஏற்படும் துர்நாற்றம் குறையும். ஆனால் நாள் முழுக்க துர்நாற்றம் இருந்தால்? குடல்/கல்லீரல் சுத்தம் தேவை என்பதற்கு அறிகுறி என்கிறார் மருத்துவர் தீபா.

நன்றாக பல் துலக்கியும், வாய் துர்நாற்றம் தீரவில்லையா? காலை பல் துலக்கியதும் அதனால் ஏற்படும் துர்நாற்றம் குறையும். ஆனால் நாள் முழுக்க துர்நாற்றம் இருந்தால்? குடல்/கல்லீரல் சுத்தம் தேவை என்பதற்கு அறிகுறி என்கிறார் மருத்துவர் தீபா.

author-image
WebDesk
New Update
jeyarupa

வாய் துர்நாற்றம் அதிகமா இருக்கா? கல்லீரலை கவனிங்க; எச்சரிக்கும் டாக்டர் ஜெயரூபா

நன்றாக பல் துலக்கியும், வாய் துர்நாற்றம் தீரவில்லையா? தூங்கும்போது உமிழ்நீர் குறைவதால் பாக்டீரியா அதிகரிக்கும். காலை பல் துலக்கியதும் அதனால் ஏற்படும் துர்நாற்றம் குறையும். ஆனால் நாள் முழுக்க துர்நாற்றம் இருந்தால்? குடல்/கல்லீரல் சுத்தம் தேவை என்பதற்கு அறிகுறி என்கிறார் மருத்துவர் தீபா.

Advertisment

வாய் துர்நாற்றத்திற்கான காரணங்கள்:

இரவில் தூங்கும்போது உமிழ்நீர் சுரப்பு குறைவதால், வாயில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ்களின் எண்ணிக்கை அதிகரித்து, வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. சொத்தைப் பற்கள், ஈறு நோய்கள் அல்லது வாயில் ஆறாத புண்கள் இருந்தால் வாய் துர்நாற்றம் ஏற்படலாம்.

Advertisment
Advertisements

கல்லீரல் மற்றும் குடல் பிரச்னைகள்:

கல்லீரலில் கழிவுகள் தேங்குவது, குடலில் உள்ள நல்ல மற்றும் கெட்ட பாக்டீரியாக்களின் சமநிலை பாதிக்கப்படுவது, வயிற்றில் ஹெச். பைலோரி (H. pylori) அல்லது கேண்டிடா (Candida) போன்ற தொற்றுகள் இருப்பது.

கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகள்:

அடிக்கடி ஏற்படும் ஒவ்வாமை (allergy), செரிமான கோளாறுகள் மற்றும் மலச்சிக்கல், காலையில் அதிக சோர்வு மற்றும் இரவில் அதிக பசியுடன் சுறுசுறுப்பாக இருப்பது, கொழுப்பு நிறைந்த கல்லீரல் (Fattyliver) பிரச்னை, தோலில்அரிப்பு, வயிறுமட்டும் பெரிதாகஇருப்பது(தொப்பை) ஆகியன

வாய் துர்நாற்றத்திற்கான எளிய வீட்டு வைத்தியம்:

இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண விலையுயர்ந்த மருந்துகளைத் தேடி வேண்டியதில்லை. வீட்டு சமையலறையிலேயே சக்திவாய்ந்த தீர்வு இருக்கிறது என்கிறார் டாக்டர் தீபா. தினமும் காலையில் பல் துலக்கிய பிறகு, வெறும் வயிற்றில் 5 துளசி இலைகளை நன்கு மென்று தின்று, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரைக் குடிக்க வேண்டும்.

நன்மைகள்: இது கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது. கல்லீரல் செல்களைப் பாதுகாத்து, அதன் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. ஹெச். பைலோரி (H. pylori) மற்றும் கேண்டிடா (Candida) போன்ற கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. குடலில் நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, செரிமானத்தை சீராக்குகிறது.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: