பாதாம் பிசினின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி டாக்டர் கௌதமன் விவரித்துள்ளார். குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு தினமும் பாதாம் பிசின் கொடுத்து வர தலைமுடி உதிர்தல் முதல் மாதவிடாய் பிரச்சனை வரை பலவற்றிக்கு தீர்வாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Advertisment
பாதாம் பிசின் பெண்களுக்கான மிகச் சிறந்த அறுமருந்து என டாக்டர் கௌதமன் கூறுகிறார். பெண் குழந்தைகளுக்கு இது மிகவும் ஆரோக்கியம் தரக் கூடியது. இரவில் 1 தேக்கரண்டி பாதாம் பிசினை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். காலை எழுந்த உடன் அதை மென்று சாப்பிட வேண்டும்.
வெறும் வயிற்றில் சாப்பிட்டு தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் மாற்றம் தெரியும். முகப் பொழிவு பெரும். தலைமுடி உதிர்தல் குறையும். தலைமுடி கருமையாக வளரும். உடல் சூடினால் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்க முடியும். குழந்தைகள் ஆரோக்கியம் இருப்பர். பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் சீராக வருவதற்கு இந்த பாதாம் பிசின் உதவும் என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news