கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக பெங்களூர் - தூத்துக்குடி இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்க தென்மேற்கு ரயில் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி பெங்களூர் வழியாக இயக்கப்படும் பெலகவி - தூத்துக்குடி சிறப்பு ரயில் (07361) பெலகவியிலிருந்து டிசம்பர் 20 அன்று காலை 09.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.00 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும். இந்த ரயில் பெங்களூரில் இருந்து இரவு 09.50 மணிக்கு புறப்படும்.
மறு மார்க்கத்தில் தூத்துக்குடி - பெங்களூர் சிறப்பு ரயில் (07362) தூத்துக்குடியில் இருந்து டிசம்பர் 21 அன்று மதியம் 01.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.00 மணிக்கு பெங்களூர் சென்று சேரும். தூத்துக்குடி - பெங்களூர் சிறப்பு ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், பங்காரப்பேட், கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
பெலகவி - தூத்துக்குடி சிறப்பு ரயில் கூடுதலாக லோண்டா, தார்வாட், ஹூப்ளி, ஹவேரி, தாவண்கரே, கடூர், அரிசிகரே, துமகுரு, சிக்பனாவர், பெங்களூர் ஆகிய ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 மாற்று திறனாளிகளுக்கான பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“