தாடியில் வாழும் நுண்ணுயிரிகள்: ஆய்வுகள் கூறுவது என்ன?

'தி வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை சமீபத்தில் வெளியிட்ட செய்தியில் "சராசரியாக ஒரு மனிதனின் தாடியில் இருக்கும் கிருமிகளுடன் ஒப்பிடும்போது, சில கழிவறைகளில் கூட கிருமிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது" என குறிப்பிட்டுள்ளது.

'தி வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை சமீபத்தில் வெளியிட்ட செய்தியில் "சராசரியாக ஒரு மனிதனின் தாடியில் இருக்கும் கிருமிகளுடன் ஒப்பிடும்போது, சில கழிவறைகளில் கூட கிருமிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது" என குறிப்பிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Man-beard

தாடியில் வாழும் நுண்ணுயிரிகள்: ஆய்வுகள் கூறுவது என்ன?

மனித சருமத்தில் பொதுவாகவே கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. இவற்றில் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வைரஸ்கள் அடங்கும். இந்த நுண்ணுயிரிகள் செழித்து வாழ்வதற்கு முகத்தில் வளரும் முடி தனித்துவமான மற்றும் அடர்த்தியான சூழலை வழங்குகின்றன. ஆய்வுகளின்படி, தாடைகள் மிகவும் அடர்த்தியான மற்றும் பலதரப்பட்ட நுண்ணுயிரிகளின் இருப்பிடமாக இருக்கின்றன. இந்த அறிவியல் உண்மையே, 'தாடைகள் இயல்பாகவே சுகாதாரமற்றவை' என்ற நீடித்த நம்பிக்கைக்குத் தொடர்ந்து காரணமாக இருந்து வருகிறது.

Advertisment

இந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில், 'தி வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை சமீபத்தில் வெளியிட்ட செய்தியில் "சராசரியாக ஒரு மனிதனின் தாடியில் இருக்கும் கிருமிகளுடன் ஒப்பிடும்போது, சில கழிவறைகளில் கூட கிருமிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளது. இந்தத் தகவல், தாடி வளர்ப்பதை விரும்பும் ஆண்கள் மத்தியிலும், சுகாதாரம் மீது அக்கறை கொண்டவர்கள் மத்தியிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாடி உண்மையிலேயே சுகாதார அபாயமா? 

"தாடியில் கழிவறையை விட அதிக கிருமிகள் உள்ளன" என்ற தகவல் ஒருபுறம் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், "தாடைகள் உண்மையிலேயே ஒரு சுகாதார அபாயத்தை ஏற்படுத்துகின்றனவா?" என்ற கேள்விக்கு நேரடியான பதில் இல்லை. 

Advertisment
Advertisements

நமது சருமத்தில் வாழும் நுண்ணுயிரிகளின் மக்கள் தொகை, இடத்தைப் பொறுத்து மாறுபடும். வெப்பநிலை, pH அளவு, ஈரப்பதம், ஊட்டச்சத்து போன்ற காரணிகள் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை தீர்மானிக்கின்றன. அந்த வகையில் தாடைகள் சூடான, பெரும்பாலும் ஈரப்பதம் நிறைந்த சூழலை உருவாக்குகின்றன. இங்கு உணவுத் துகள்களும், முகத்தில் சுரக்கும் எண்ணெய்ப் பிசுக்கும் எளிதில் சேர்வதால், இது நுண்ணுயிரிகள் வளர்வதற்கான மிகச் சிறந்த நிலைமைகளை வழங்குகிறது.

தாடியில் நிலவும் இந்தச் சூழல் மட்டுமின்றி, நுண்ணுயிரிகள் செழிக்க மற்றொரு முக்கிய காரணமும் உண்டு. நாம் அன்றாடம் பல பரப்புகளைத் தொடும் கைகளால், அடிக்கடி முகத்தையும் தாடியையும் தொடும்போது, புதிய அசுத்தங்களும் நுண்ணுயிரிகளும் தொடர்ந்து பரவிக்கொண்டே இருக்கின்றன.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

தாடியின் சுகாதாரம் குறித்த விஞ்ஞானிகளின் கவலைகள் 50 ஆண்டுகளுக்கும் மேலாகவே இருந்து வருகின்றன. "முகத்தில் உள்ள முடிகளை நன்கு கழுவிய பிறகும் கூட, அதில் பாக்டீரியாக்களும், பாக்டீரியா நச்சுக்களும் (toxins) தங்கியிருக்கும்" என்பதை ஆரம்பகால ஆய்வுகள் காட்டின. இந்த ஆய்வுகளின் முடிவே, "தாடைகள் என்பவை பாக்டீரியாக்களின் சேமிப்புக் கிடங்கு (bacterial reservoir) போல செயல்படுகின்றன; இதனால் மற்றவர்களுக்கு நோய்த்தொற்று அபாயம் ஏற்படக்கூடும்" என்ற நீடித்த கருத்துக்கு வழிவகுத்தது.

தாடைகள் பாக்டீரியாக்களின் சேமிப்புக் கிடங்காகச் செயல்படக்கூடும் என்ற கருத்து, சுகாதாரப் பணியாளர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நோய்க்கிருமிகள் எளிதில் பரவும் அபாயம் உள்ள மருத்துவமனைகளில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தாடி வளர்ப்பது குறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன. ஆனால், இந்த விஷயம் தொடர்பாக மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள், முன்னுக்குப் பின் முரணான, கலவையான முடிவுகளையே காட்டியுள்ளன.

தாடிக்கு எதிரான சான்றுகள்:

ஒரு ஆய்வில், தாடி வைத்திருக்கும் சுகாதாரப் பணியாளர்களின் முகங்களில், முழுமையாக ஷேவ் செய்த சக ஊழியர்களை விட அதிக அளவில் பாக்டீயாக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

மற்றொரு சுவாரஸ்யமான ஆய்வில், நாய்களையும் மனிதர்களையும் ஒரே எம்ஆர்ஐ (MRI) ஸ்கேனரில் பரிசோதிப்பது சுகாதாரமானதா என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். அதன் முடிவில், பெரும்பாலான ஆண்களின் தாடிகளில், நாய்களின் உரோமத்தை விட கணிசமாக அதிக நுண்ணுயிரிகள் இருப்பது தெரியவந்தது. இதில், மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களும் அதிகமாக இருந்தன. இதனால், அந்த ஆய்வின் முடிவில், "நாய்கள் மனிதர்களுடன் ஒரே எம்.ஆர்.ஐ கருவியைப் பயன்படுத்தினால் எந்த ஆபத்தும் இல்லை" என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டனர்.

தாடிக்கு ஆதரவான சான்றுகள்: 

"தாடைகள் நோய்த்தொற்று அபாயத்தை அதிகரிக்கின்றன" என்ற கருத்தை மற்ற சில ஆய்வுகள் வலுவாகக் கேள்விக்குள்ளாக்குகின்றன. உதாரணமாக, ஒரு முக்கிய ஆய்வில், தாடி வைத்த மற்றும் ஷேவ் செய்த சுகாதாரப் பணியாளர்களின் முகங்களில் இருந்த பாக்டீரியாக்களின் குடியேற்றத்தில் (bacterial colonisation) குறிப்பிடத்தக்க வேறுபாடு எதுவும் இல்லை என்று கண்டறியப்பட்டது.

தாடி வைத்த மற்றும் ஷேவ் செய்த மருத்துவர்களிடையே பாக்டீரியாக்களின் எண்ணிக்கையில் பெரிய வேறுபாடு இல்லை என்று கண்டறிந்த அதே ஆய்வு, ஒரு வியப்பூட்டும் தகவலையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, மருத்துவமனை தொற்றுகளுக்கு முக்கிய காரணமாக விளங்கும் 'ஸ்டேஃபோலோகாக்கஸ் ஆரியஸ்' (Staphylococcus aureus) என்ற அபாயகரமான பாக்டீரியா, தாடி வைத்த மருத்துவர்களிடம் குறைவாகவே காணப்பட்டது என அந்த அறிக்கை குறிப்பிட்டது.

மேலும், அறுவை சிகிச்சையின்போது முகக்கவசம் (surgical mask) அணிந்திருந்த தாடியுள்ள அறுவை சிகிச்சை நிபுணர்களால் சிகிச்சையளிக்கப்பட்ட நோயாளிகளிடையே, தொற்று விகிதங்களில் எந்தவிதமான அதிகரிப்பும் இல்லை என்பதும் அந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.

தாடி குறித்த விவாதங்கள் ஒருபுறம் இருக்க, முறையாகப் பராமரிக்கப்படாத, புறக்கணிக்கப்பட்ட தாடிகள் எரிச்சல், சரும அழற்சி (inflammation) மற்றும் நோய்த்தொற்றுகளை வளர்க்கும் என்பதை மறுக்க முடியாது. தாடிக்கு அடியில் உள்ள சருமத்தில் இரத்த நாளங்கள், நரம்பு முனைகள் மற்றும் நோயெதிர்ப்பு செல்கள் நிறைந்துள்ளதால், அது நுண்ணுயிரிகள் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் எளிதில் பாதிக்கப்படக்கூடியது.

முகத்தில் சுரக்கும் எண்ணெய்ப்பசை (sebum), இறந்த சரும செல்கள், உணவுத் துகள்கள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுகள் தாடியில் சேரும்போது, அவை சருமத்தில் எரிச்சலை உண்டாக்கி, பூஞ்சை மற்றும் பாக்டீரியா வளர்ச்சிக்கு சிறந்த உணவாக அமைகின்றன.

சுகாதார நிபுணர்கள், உங்கள் தாடியையும் முகத்தையும் தினமும் தவறாமல் கழுவ வேண்டும் என்று கடுமையாகப் பரிந்துரைக்கின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம், தாடியில் சேரும் அழுக்கு, கூடுதல் எண்ணெய், ஒவ்வாமையை உண்டாக்கும் துகள்கள் மற்றும் இறந்த செல்களை அகற்றி, நுண்ணுயிரிகள் பெருகுவதைத் தடுக்கலாம்.

சருமநோய் நிபுணர்கள் வழங்கும் கூடுதல் ஆலோசனைகள்:

  • ஈரப்பதம் (Moisturising): சருமம் வறண்டு போகாமல் தடுக்க, தாடிக்கென உள்ள மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தலாம்.
  • சீப்பு பயன்படுத்துதல் (Combing): தாடி சீப்பைக் கொண்டு சீவுவதன் மூலம், சிக்கல்களை எடுப்பதுடன், மாட்டிக்கொண்டிருக்கும் தேவையற்ற துகள்களையும் அகற்றலாம்.
  • ட்ரிம்மிங் (Trimming): தாடியை சீரான இடைவெளியில் ட்ரிம் செய்வதன் மூலம், உதிரும் முடிகளைக் கட்டுப்படுத்தி, அதன் ஆரோக்கியத்தையும் தோற்றத்தையும் ஒருசேரப் பராமரிக்கலாம்.

தாடைகள் அழுக்கானவையா? பெரும்பாலான விஷயங்களைப் போலவே, இதன் பதிலும் நீங்கள் அவற்றை எவ்வளவு நன்றாகக் கவனித்துக்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: