உங்கள் சருமம் சிறப்பாக உணர, வீட்டில் உட்கார்ந்து நீங்கள் செய்யக்கூடிய பல விஷயங்கள் உள்ளன. .
Advertisment
பழங்கள், காய்கறிகள் மற்றும் இயற்கை எண்ணெய்கள் - சமையலறை பொருட்களை உள்ளடக்கிய சில எளிதான சரும பராமரிப்பு குறிப்புகள் உள்ளன. இந்த கோடையில், தக்காளியைப் போல உங்கள் முகத்தை சிவப்பாகவும், பளபளப்பாகவும் மாற்ற விரும்பினால், பழங்களை உள்ளடக்கிய சில எளிய ஃபேஸ் பேக்குகளை நீங்கள் முயற்சிக்கலாம்.
இந்த ஃபேஸ் பேக்குகள் என்ன, அவற்றை நீங்கள் எப்படி செய்யலாம் என்பதை பாருங்கள்!
தக்காளி மற்றும் சர்க்கரை ஃபேஸ் பேக்
Advertisment
Advertisements
இது ஒரு ஸ்க்ரப்பாகவும் செயல்படும். இது சருமத்தை சுத்தம் செய்து அதன் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும். இதற்கு தக்காளியை பிசைந்து சாறு எடுக்க வேண்டும். இதில், ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். உங்கள் முகத்தில் பேஸ்ட்டை மெதுவாக தடவவும். சிறிது நேரம் விட்டுவிட்டு, தண்ணீரில் கழுவுவதற்கு முன், உலர அனுமதிக்கவும். வித்தியாசத்தைக் காண இதை தவறாமல் செய்யுங்கள்.
தக்காளி மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்
இந்த இரண்டுமே இயற்கையான கிளென்சராக செயல்படுகிறது. அவை சருமத்தில் உள்ள நச்சுகளை அகற்றி, முகப்பரு வராமல் தடுக்கிறது. இவை இணைந்து’ சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்யை நீக்கி, பளபளப்பாக்கும்.
இந்த பேக் செய்ய, நீங்கள் சில தக்காளிகளை பிசைந்து சாறு எடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலக்க வேண்டும். பேஸ்ட்டில் சிறிது தேன் சேர்த்து முகத்தில் தடவலாம். அதை அப்படியே விட்டு சில நிமிடங்கள் உலர விடவும். அது காய்ந்ததும் தண்ணீரில் கழுவவும்.
தக்காளி மற்றும் தேன் ஃபேஸ் பேக்
தக்காளி, தேன் இரண்டுமே உங்கள் சருமத்தை இயற்கையாக பளபளக்கும். இது முகத்தை நன்றாக சுத்தம் செய்து புதிய பிரகாசத்தை தருகிறது. இந்த பேக் செய்ய, உங்களுக்கு மசித்த தக்காளி மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் தேவைப்படும். இரண்டையும் கலந்து பேஸ்ட் செய்யவும். பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவி உலர விடவும்.
அது உரிந்து வரும்போது, தண்ணீரில் கழுவவும். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதைச் செய்யுங்கள், நீங்கள் மீண்டும் சலூனுக்குச் செல்ல வேண்டியதில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“