ஒரு பெரிய பாத்திரத்தில் ஐஸ் கட்டிகள் மற்றும் குளிர்ந்த நீரை சேர்த்து அதில் முகத்தை முக்கி எடுக்கும் முறை தற்போது பிரபலமாகி வருகிறது.
இந்நிலையில் இதனால் ஏற்படும் நன்மைகளை நாம் தெரிந்துகொள்ளலாம். முகம் வீங்குதல்: இதில் உள்ள குளிரான நிலை, ரத்த குழாய்களை சுருங்கச் செய்யும். கண்களை சுற்றி உள்ள வீக்கம் மற்றும் முகத்தில் இருக்கும் வீக்கத்தை குறைக்க உதவும்.
ஐஸில் உள்ள குளிர்ச்சித் தன்மை முகத்தில் உள்ள சிறு துளைகளை இருக்கமாக்கும். எண்ணெய் வழியும் முகத்திற்கு, இது புத்துணர்ச்சியான ஒரு தோற்றத்தை கொடுக்கும்.
ஐஸில் வீக்கத்திற்கு எதிரான பண்புகள் உள்ளது. இதனால் முகத்தில் உள்ள எரிச்சலை ஊட்டும் சிவப்பு தடங்கள், வீக்கத்தை குறைக்கிறது. அதிக வெயில் மற்றும் பருக்களால் ஏற்படும் சிக்கலை இது குறைக்க உதவும்.
குளிர்ச்சியான தன்மை நமது ரத்த ஓட்டத்தை ஊக்கப்படுத்தும். இதனால் நமது முகத்திற்கு இளம் ரோஸ் நிறம் கிடைக்கும். நல்ல ரத்த ஓட்டம் முகத்திற்கு ஆக்ஸிஜன் ஓட்டத்தை கொடுக்கும்.
இந்நிலையில் ’லிம்பாட்டிக் டிரேனேஜ்’ நடைபெற உதவும். இதனால் முகத்தில் உள்ள நஞ்சுகள் நீங்கும். அதிகபடியான திரவங்கள் வெளியேறும். இதனால் நமது சருமத்தின் நிறம் கூடுதல் அழகாக மாறும்.
குளிர் தண்ணீரால் ஒரு ஷாக் போன்ற நிலை ஏற்படும். இது நமது உணர்ச்சிகளை தூண்டிவிடும். இதனால் நமக்கு ஒரு புத்துணர்வு கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“