உப்பு, கிராம்பு உடன் இதை சேருங்க… வீட்டில் 24 மணி நேரமும் நறுமணம் வீசும்!

இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் ஏர் ஃப்ரஷ்னர் நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த முடியும். அதே நேரத்தில் நாமாக உருவாக்கும்போது நமக்கு பிடித்த நிறங்கள் மற்றும் நறுமணங்களில் இதனை நாம் தயாரித்துக் கொள்ளலாம்.

இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் ஏர் ஃப்ரஷ்னர் நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த முடியும். அதே நேரத்தில் நாமாக உருவாக்கும்போது நமக்கு பிடித்த நிறங்கள் மற்றும் நறுமணங்களில் இதனை நாம் தயாரித்துக் கொள்ளலாம்.

author-image
WebDesk
New Update
air freshener

உப்பு, கிராம்பு உடன் இதை சேருங்க… வீட்டில் 24 மணி நேரமும் நறுமணம் வீசும்!

பொதுவாக குளிர் காலங்களில் வீட்டில் ஒருவித வாசனை வீசக் கூடும். இது ஈரத்தன்மை காரணமாக ஏற்படுகிறது. எல்லா நேரங்களிலும் வீட்டில் நல்ல நறுமணம் வீசுவதற்கு ஏர் ஃப்ரஷ்னர் பயன்படுத்தலாம். இதனை கடையில்தான் வாங்க வேண்டும் என்று அவசியமில்லை. வீட்டிலேயே மிக எளிய முறையில் தயாரித்துக் கொள்ளலாம். இதன் பயன்கள் மற்றும் இதனை எவ்வாறு தயாரிப்பது? என்பது குறித்து இந்தப் பதிவில் காணலாம்.

Advertisment

வீட்டில் உள்ள சில பொருட்களைப் பயன்படுத்தி மிக எளிதாக ஏர் ஃப்ரஷ்னர் தயாரித்துவிட முடியும். குறிப்பிட்ட நேரம் காற்றில் வாசனையை பரவ செய்து வீட்டில் நல்ல நறுமணத்தை வீசக்கூடிய தன்மை இதற்கு உள்ளது. இதன் தயாரிப்பு முறையைப் பொறுத்து இந்த பொருளானது நீண்ட நாட்களுக்கு நீடிக்க கூடியது. மிகவும் மலிவாகவும் வாசனையுடனும் இதனை நாம் தயாரித்து விடலாம். வீட்டில் உள்ள அத்தியாவசிய பொருட்களைப் பயன்படுத்தி இதனை தயாரிப்பது மிக எளிது. அதிக பணம் செலவழிக்காமல் வீட்டிலேயே இது போன்ற பொருட்களை நாம் தயாரித்துக் கொள்ளலாம். உங்களது குளியலறை, ஹால், கார் என எல்லா இடங்களிலும் இதனை பயன்படுத்தலாம். 

வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய இதுபோன்ற ஏர் ஃப்ரஷ்னர் நச்சுத் தன்மையற்றதாக உள்ளது. இதனால் இதனை நாம் சுவாசிக்கும்போது நமக்கு எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. இதுவே நீங்கள் கடையில் வாங்கக்கூடிய பொருட்களில் ரசாயனங்கள் கலக்கப்பட்டிருக்கும். இதனை நாம் தினசரி சுவாசிக்கும்போது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கலாம். மேலும் நோய் எதிர்ப்பாற்றல் குறையலாம் எனவும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் ஏர் ஃப்ரஷ்னர் நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த முடியும். அதே நேரத்தில் நாமாக உருவாக்கும்போது நமக்கு பிடித்த நிறங்கள் மற்றும் நறுமணங்களில் இதனை நாம் தயாரித்துக் கொள்ளலாம். மேலும் நமக்கு பிடித்த நபருக்கு அவர்களுக்கு பிடித்த விதத்திலேயே இதனை தயாரித்துக் கொடுத்து ஆச்சரியப்படுத்தலாம்.

Advertisment
Advertisements

தேவையான பொருட்கள்: கல் உப்பு, கம்ஃபோர்ட், கிராம்பு, கற்பூரம், சிறிய டப்பா.

செய்முறை: முதலில் சிறிய டப்பாவில் 2 ஸ்பூன் கல் உப்பு போட்டு, அதில் துணி துவைக்க பயன்படுத்தப்படும் கம்ஃபோர்ட் 2 மூடி ஊற்ற வேண்டும். அதனுடன் 10 கிராம்பு, 5 கற்பூரம் சேர்த்து டப்பாவை நன்கு அடைத்து வைத்துக் கொள்ளவும். தற்போது, டப்பாவில் சிறிய அளவிலான துளைகள் இட வேண்டும். இதை படுக்கை அறை, வரவேற்பு அறை, படிக்கும் அறை, குளியலறை என எல்லா இடங்களிலும் தயாரித்து பயன்படுத்தி கொள்ளலாம்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: