New Update
![Barefoot walking](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2024/12/10/ZH4sSaTif6mw8G8L99m0.jpg)
தற்போதைய சூழலில் வெறுங்காலால் நடப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. நகர்ப்புறங்கள் மட்டுமின்றி, கிராமப் புறங்களிலும் மக்கள் வெறுங்காலுடன் நடப்பதில்லை. ஆனால், வெறுங்காலால் நடக்கும் போது நமக்கு பல்வேறு நன்மைகள் உருவாகும் என பல வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பல வெளிநாட்டவர் வெறுங்காலுடன் நடக்கும் வழக்கத்தை இன்றளவும் கடைபிடித்து வருகின்றனர். குறிப்பாக, புல்வெளிகள், மணல் பரப்புகள் போன்ற பாதுகாப்பான இடங்களில் வெறுங்காலால் நடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெறுங்காலுடன் நடப்பது இயற்கையுடன் இணைந்து இருப்பது போன்ற உணர்வை நமக்கு கொடுக்கும். ஆஸ்திரேலியர்கள் இயற்கை மீது மிகுந்த மரியாதை கொண்டவர்களாக அறியப்படுகிறார்கள். வெறுங்காலுடன் நடப்பதன் மூலம் இயற்கையுடன் இணைந்திருப்பதை உணர்வதாக அவர்கள் கூறுகிறார்கள்.
வெறுங்காலுடன் நடக்கும் போது பாதங்களில் உள்ள நரம்பு மண்டலங்கள் தூண்டப்படும் என அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கால்களுக்கும், நரம்புகளுக்கும் அழுத்தத்தை கொடுத்து இயக்குவதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மன அழுத்தம் இல்லாத சூழலை ஏற்படுத்த வெறுங்காலுடன் நடப்பது உதவுகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.