/indian-express-tamil/media/media_files/2025/10/28/download-26-2025-10-28-14-01-18.jpg)
விட்டமின் மற்றும் மினரல் நிறைந்த கொய்யா பழம், சுவையும் ஆரோக்கியத்திற்கும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. பெரிதும் தோட்டங்கள் இல்லாமல் கூட, வீட்டிலேயே, பால்கனி அல்லது மாடி இருந்தால், கொத்துக் கொத்தாக பழங்கள் தரும் கொய்யா செடிகளை வளர்க்க முடியும். இதற்கான சில எளிய பராமரிப்பு குறிப்புகளை பார்க்கலாம்.
சரியான தொட்டியைத் தேர்வு செய்யவும்
கொய்யா மரம் வளர்க்க, 18–24 இன்ச் ஆழமும் அகலமும் கொண்ட தொட்டியை பயன்படுத்துவது அவசியம். கொய்யா மரத்தின் வேர் விரைவாக பரவுவதால், போதுமான இடம் வேண்டியது முக்கியம்.
மண் வளம் மற்றும் உரம்
ஊட்டச்சத்து மிக்க மண் இருக்கும்போது செடி அதிக பழம் தரும். சீரான வளம் மற்றும் உரம் பயன்படுத்துங்கள். மண்ணில் கோக்கோபீட், பெர்லைட் போன்றவை கலந்து வளர்ச்சி அதிகரிக்க உதவும். மண் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும்.
சூரிய வெளிச்சம
கொய்யா செடி குறைந்தது 6–7 மணி நேரம் சூரிய வெளிச்சம் பெற வேண்டும். எனவே, சூரிய ஒளி நேரமாக வரும் இடத்தில் தொட்டியை வைத்து வளர்த்தால் சிறந்தது.
தண்ணீர் மற்றும் உரம்
முதலில் வளர்ச்சியடைந்த செடியுக்கு அதிக தண்ணீர் தேவையாகும். மண் எப்போதும் ஈரமாக இருக்க வேண்டும். குளிர் மற்றும் மழைக்காலத்தில் நீர் அளவை குறைத்துக்கொள்ளுங்கள். மேலும், 4–6 வாரங்களுக்கு ஒரு முறை உரம் கொடுக்கப்படும்போது, செடி வேகமாக வளர்ந்து அதிக பழம் தரும்.
பராமரிப்பு
பழுத்த இலைகள், காய்ந்த இலைகள் மற்றும் சுற்றி வளர்ந்த களைச்செடிகள் இருந்தால் அவற்றை அகற்ற வேண்டும். கிளைகள் விரிவாகப் பரவுவதை தடுக்கும் முறைகளையும் செய்யலாம்.
கொய்யா அறுவடை
கொய்யா செடி பொதுவாக தானாகவே மகரந்தச் சேர்க்கையை செய்கிறது. செடி 2–4 ஆண்டுகளில் பழம் கொடுக்கும் நிலையில் இருக்கும். பழங்கள் சிறிது மென்மையாகி தோல் நெகிழ்ச்சியடைந்த பிறகு பறித்து சாப்பிடலாம்.
இந்த எளிய மற்றும் நேர்த்தியான பராமரிப்பு முறைகளை பின்பற்றுவதன் மூலம், வீட்டிலேயே பால்கனி அல்லது மாடியில் கொய்யா செடி வளர்த்துச் சுவை நிறைந்த பழங்களை அனுபவிக்க முடியும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us