/indian-express-tamil/media/media_files/2025/08/27/istockphoto-160690289-612x612-1-2025-08-27-19-02-28.jpg)
சமையல் என்பது ஒரு கலை என்பது பழமையான, ஆனால் மிக்க அர்த்தமுள்ள ஒரு சொல்லாகும். உணவை சமைப்பது மட்டும் போதாது, அதை சுவைமிக்கவையாகவும், அனைவரும் ரசிக்கக்கூடிய வகையிலும் தயார் செய்வதே உண்மையான சமையல் கலை. ஒவ்வொரு உணவிலும் ஒரு சிறிய மாற்றம் கூட அதன் ருசியை பெரிதும் உயர்த்தக்கூடியதாக இருக்கும்.
அதற்காக பெரிய கலைஞராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை — சில சின்னசின்ன, ஆனால் முக்கியமான சமையல் டிப்ஸ்கள் உங்கள் சாதாரண சமையலை கூட சிறப்பாக மாற்ற முடியும். உப்பு, மிளகாய், மசாலா அளவுகளை சரியாக கட்டுப்படுத்துவது, எந்த வேளையில் என்ன சேர்ப்பது, பொருட்களை எவ்வாறு வெட்டுவது, வதக்குவது, ஊறவைப்பது போன்றவை எல்லாம் உணவின் இறுதிச் சுவையை தீர்மானிக்கின்றன.
இந்த பதிவில், உங்கள் சமையல் திறனை மேம்படுத்தவும், சமைக்கும் உணவு அனைவராலும் ரசிக்கப்படும்படி இருக்கவும் உதவும் சில எளிய, ஆனால் பயனுள்ள சமையல் குறிப்புகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இப்படியான டிப்ஸ்கள் தினசரி சமையலுக்கு நேரத்தையும் சக்தியையும் மிச்சப்படுத்துவதோடு, உங்கள் சமையலை ஒரு புதிய நிலைக்கு கொண்டு செல்லும்.
- பாகற்காயில் பொரியல் செய்வதற்குள், அதனை சிறிது நேரம் தயிரில் ஊறவைத்து விட்டால், அதன் கசப்புத் தன்மை கணிசமாக குறைந்து, சுவையாக மாறும்.
- கூட்டு பொரியல் சமைக்கும்போது அதில் வறுத்த வேர்க்கடலை பொடியை சேர்த்துக்கொண்டால் வித்தியாசமான சுவையை கொடுக்கும். மணமாகவும் இருக்கும்.
- பாயாசம் தண்ணீர்போல் மிதமாக இருந்தால், ஒரு நன்றாக மசித்த வாழைப்பழத்தில் சிறிது தேன் சேர்த்து, அதை கொதிக்கும்படியான பாயாசத்தில் சேர்த்துப் பிறகு நன்கு கிளறுங்கள். இதனால் பாயாசம் திடமாயும், சுவையும் இன்னும் சிறப்பாக மாறும்.
- பஜ்ஜி மாவு கரைத்த உடனே சீவிய வாழைக்காயை அதில் போட்டு பொரித்தால் எண்ணெய் குடிக்காது. பஜ்ஜி உப்பியும், மொரு மொவென்று வரும். சுவையும் அருமையாக இருக்கும்.
- கேசரி உதிரியாகவும், அதன் சுவையை அதிகரிக்கவும் இறுதியில் சிறிதளவு வறுத்த கடலை மாவை அதில் போட்டு கிளறவும்.
- தக்காளி சட்னி ருசியாக வர அதனுடன் சிறிதளவு வறுத்த எள்ளை சேர்த்து அரைக்கவும். கூடுதல் சுவையையும் கொடுக்கும்.
- குழம்பு செய்வதற்கு முன், காய்கறிகளும் வெங்காயமும் நன்றாக வதங்கிய பிறகு தக்காளியை சேர்த்து வதக்கி குழம்பை தயாரிக்க வேண்டும். இப்படிச் செய்தால் குழம்பின் சுவை நெஞ்சில் நிற்கும் அளவுக்கு அருமையாக இருக்கும்.
- பூரி மாவை பிசையும் போது, சூடான நீருடன் சிறிதளவு நெய் சேர்த்து பிசையுங்கள். இதனால் பூரிகள் நன்கு உப்பாகவும், மென்மையாகவும், சாப்பிட சுவையாகவும் தயாராகும்.
- உளுந்து மாவு அரைக்கும் போது, சாதாரண தண்ணீர் மாற்றாக "ஜில்வாட்டர்" (அரிசி ஊறிய தண்ணீர்) பயன்படுத்தினால், மாவு நன்கு பஞ்சுபோல் மென்மையாக இருக்கும். அதே நேரத்தில் அதிக அளவில் மாவும் கிடைக்கும்.
- தேங்காயை சிறிது நேரம் சூடான நீரில் போட்டு வைத்த பிறகு பிழித்தால், முதல் முறையில் தான் அதிக தேங்காய் பால் எடுக்க முடியும். மீண்டும் பிழிந்து பால் எடுக்க தேவையில்லை; நேரம் மிச்சம் ஆகும்.
வீட்டிலேயே சுவையான உணவுகளை எளிதாக செய்வதற்கான இவை போன்ற டிப்ஸ்கள், உங்கள் சமையலின் தரத்தையும் சுவையையும் அதிகரிக்கும்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.