/indian-express-tamil/media/media_files/2025/10/07/download-2025-10-07t172-2025-10-07-17-22-45.jpg)
வீட்டில் அடிக்கடி கரப்பான்கள் தோன்றுவது ஒரு பொதுவான தொல்லையாகவே மாறிவிட்டது. சமையலறை, கழிப்பறை, மனைவாசல் உள்ளிட்ட இடங்களில் இரவு நேரங்களில் சுறுசுறுப்பாக சுற்றிக்கொண்டு வருவது மட்டுமின்றி, சுத்தம் செய்த பின் கூட மறுபடியும் தோன்றும் இந்த உயிரினங்கள், உணவுப் பொருட்களையும், உடல்நலத்தையும் பாதிக்கக் கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
கரப்பான் எப்படி வருகிறது?
கரப்பான்கள் பொதுவாக ஈரப்பதமான, இருட்டான இடங்களை விரும்புகின்றன. கம்பியில்லாத மூடிகள், சிதைந்த குழாய்கள், கழிவுநீர் வழிகளில் இருந்து உள்ளே நுழைவது முக்கிய காரணமாகும். குறிப்பாக, சமையலறையில் உணவுப்பஞ்சுகளை வெளியே வைக்கும் பழக்கம், தேங்கிய நீர் மற்றும் கழிவுகள், இவை அனைத்தும் கரப்பான்களுக்கு வாழ்வதற்கும் இனப்பெருக்கத்திற்கும் சரியான சூழலை வழங்குகின்றன.
விளைவுகள் என்ன?
கரப்பான்கள் வெளியில் சுற்றி வருகின்ற இடங்கள் தூய்மையற்றவை என்பதாலேயே அவை பரப்பும் கிருமிகள், பாசிலஸ், ஈ.கோலை, சால்மொனெல்லா போன்ற பாக்டீரியாக்களை உள்ளடக்கியதாக இருக்கலாம். இதன் காரணமாக உணவுகள் மாசடையலாம்; அலர்ஜிகள், குடல் தொற்று, சளி, இருமல், அஸ்துமா போன்ற பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.
எளிமையான தடுப்பு வழிகள்
- தண்ணீர் தேங்காமல் இருக்க பார்த்துக்கொள்: சிங்க், கழிப்பறை, குளியலறையில் பாழான நீர் தேங்காதே.
- சமையலறையை தினசரி சுத்தம் செய்: உணவுப் பஞ்சுகள், எண்ணெய் தழும்புகள் அங்கு கரப்பான்களுக்கு ஈர்க்கும் உணவாக அமையும்.
- பழைய மேல் மூடியைப் பயன்படுத்தாதே: துளையுள்ள மூடியை பயன்படுத்தினால், பாம்புகளோ, கரப்பான்களோ எளிதில் நுழைவது வழக்கம்தான்.
- கவர் பயன்படுத்தவும்: குறிப்பாக சிங்க் அல்லது கழிப்பறை சாய்வுகளின் அருகில் உள்ள துவாரங்களில் பிளாஸ்டிக் கவர் அல்லது மெஷ் வைப்பு மூலம் பூச்சிகள் உள்ளே நுழைவதை தடுக்கலாம்.
- பசும்புளி, வெள்ளைக்கடலை மாவு, பேக்கிங் சோடா போன்ற இயற்கை முறைகளும் பயனளிக்கும்.
- புரோபஷனல் பெஸ்ட் கண்ட்ரோல்: மிகவும் மோசமான நிலை என்றால், விஷமில்லாத பூச்சி ஒழிப்பு சேவைகளை அணுகலாம்.
ஒரு எளிய டிப்!
இது அனைத்தையும் செய்தும் உங்கள் கிட்சன் சிங்க்கில் கரப்பாண்பூச்சிகள் வந்தால் இந்த ஒரு டிப் மட்டும் செய்து பாருங்கள், கர்ப்பங்கள் இருந்த இடமே இல்லாமல் போய்விடும். இதை செய்வதற்கு ஒரு நியூஸ் பேப்பர் போதும்.
ஒரு நியூஸ் பேப்பர் எடுத்து அதை தண்ணீரில் நனைத்து அந்த சிங்க் ஓட்டையில் இரவு தூங்கும் முன் வைத்துவிட வேண்டும். இப்படி செய்வதனால் அக்ரப்பான்கள் சுத்தமாக வரவே வராது. அதே நேரத்தில் அதிலிருந்து கெட்ட வாடையும் வராது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.