ஃப்ரிட்ஜிக்குள் தேங்காய் சிரட்டை...ஆயிரக் கணக்கில் காசு மிச்சம் பண்ணலாம்!

தேங்காய் சிரட்டையை ஃபிரிட்ஜில் வைப்பதால் உணவுகள் எளிதில் கெடாமல் பாதுகாக்கப்படுவதுடன், மின்சார பயன்பாடும் குறைவாக இருக்கும் என்பது பற்றிய விவரங்களை இந்தப் பதிவில் காணலாம்.

தேங்காய் சிரட்டையை ஃபிரிட்ஜில் வைப்பதால் உணவுகள் எளிதில் கெடாமல் பாதுகாக்கப்படுவதுடன், மின்சார பயன்பாடும் குறைவாக இருக்கும் என்பது பற்றிய விவரங்களை இந்தப் பதிவில் காணலாம்.

author-image
WebDesk
New Update
download (45)
தேங்காய் சிரட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது எவ்வாறு உணவுப்பொருட்களின் கெடுபாடை தடுப்பதோடு மட்டுமல்லாமல், மின்சார நுகர்வையும் குறைத்து சிக்கனமாக மாற்றுகிறது என்பதையும் இந்த செய்தி தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.
Advertisment

அடிக்கடி ஏற்படும் மின்தடைகள் காரணமாக ஃபிரிட்ஜில் இருக்கும் உணவுகள் பழுதுபட்டு வீணாகும் நிலை உருவாகுவது கவலையை ஏற்படுத்துகிறது. மேலும், ஒவ்வொரு முறையும் ஃபிரிட்ஜ் கதவைத் திறக்கும்போது உள்ளிருக்கும் குளிர்ச்சி காற்று வெளியேறி விடுவதால், கம்ப்ரசர் அதிகமான உழைப்பைச் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது மின்சார நுகர்வை அதிகரிக்கச் செய்கிறது.

இதற்கான ஒரு எளிய தீர்வாக, தேங்காய் சிரட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது மூலம் உணவுகளை நீண்ட நாள் கெடாமல் வைத்திருக்க முடியும்; அதேசமயம், மின்சார சேமிப்பும் ஏற்படுகிறது. இந்த நடைமுறையின் பயன்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.

சுத்தம் செய்த தேங்காய் சிரட்டையை, மூடியுடன் இருக்கும் ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் (பழைய ஐஸ்கிரீம் டப்பா போன்றவை சரியான தேர்வாகும்) வைக்கவும். அதன் மீது சிரட்டை முழுமையாக மூடும் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும். பிறகு, டப்பாவை நன்றாக மூடி, அதை உங்கள் ஃபிரிட்ஜின் பிரீசர் பகுதியில் 6 முதல் 8 மணி நேரம் வைக்கவும், பனிக்கட்டியாக மாறும் வரை.

Advertisment
Advertisements

பனியாக உறைந்ததும், அந்த டப்பாவை (உறைந்த பனியுடன் கூடிய சிரட்டையோடு) எடுத்துக் கொண்டு, ஃபிரிட்ஜில் பால், மாவு மற்றும் பிற நுட்பமான உணவுப்பொருட்கள் வைத்திருக்கும் இடத்தில் வைக்கலாம். இது சாதாரண பனிக்கட்டியைவிட சிறப்பானது, ஏனெனில் தேங்காய் சிரட்டையின் இயற்கையான பண்புகள், அதனை மிகவும் மெதுவாக உருகச் செய்யும். இதனால், அந்த இடம் நீண்ட நேரம் குளிர்ச்சியுடன் இருக்கும்.

மெதுவாக உருகும் இந்த பனிக்கட்டி, ஃபிரிட்ஜிற்குள் நீண்ட நேரம் நிலையான குளிர்ச்சியை வழங்குகிறது. இதன் மூலம் உணவுகள் கெடாமல் பாதுகாக்கப்படுகின்றன, மேலும் மளிகைப் பொருட்கள் வீணாகும் சூழ்நிலையையும் தவிர்க்க முடிகிறது. அதிக நேரம் குளிர்ச்சி நிலைத்திருப்பதால், ஃபிரிட்ஜின் கம்ப்ரசர் அதிகமாக செயல்பட வேண்டிய தேவை குறைகிறது. இதனால், மின்சார நுகர்வு குறைந்து, உங்கள் மின் கட்டணமும் மாத இறுதியில் சிக்கனமாக வரும்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: