கேரட்டில் இருக்கும் பீட்டா கரோட்டின் இந்த அரிசியில்... கண் பார்வைக்கு நல்லது: மருத்துவர் சிவராமன்

கண் பார்வைக்கு நன்மை தரும் திணை அரிசி பற்றி மருத்துவர் சிவராமன் விளக்கி உள்ளார்.

கண் பார்வைக்கு நன்மை தரும் திணை அரிசி பற்றி மருத்துவர் சிவராமன் விளக்கி உள்ளார்.

author-image
WebDesk
New Update
Thinai

திணை அரிசி மற்றும் அதன் நன்மை பற்றி சித்த மருத்துவர் கு.சிவராமன் விளக்கி உள்ளார். சிவராமன் யூடியூப்  வீடியோவில் பேசுகையில், "திணை அரிசி குழந்தைகளின் கண் பார்வைக்கு நல்லது.  திணை வகைகளில் மிகச் சிறப்பானது இந்த அரிசி. கேரட்டில் இருக்கும் பீட்டா கரோட்டின் இந்த அரிசியில் உள்ளது. இந்த அரிசி பசி ஆறுவது, சுவைக்கு மட்டுமல்ல கண்களுக்கும் நன்மை தருகிறது. 

Advertisment

அரிசியை விட கம்பில் 8 மடங்கு இரும்பு சத்து உள்ளது. தினமும் ஒரே அரிசியை சாப்பிடாமல் வேறு வேறு அரிசியில் சாப்பிடுவது உடலுக்கு சத்து தரும். ஒரு நாள் திணை அரிசி பொங்கல், ஒரு நாள் கம்பு மோறு கூழ், வரகு அரிசி சாப்பிடலாம்.

நம் நாட்டில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட அரிசி இனங்கள் உள்ளன. அன்றைய காலத்தில் ஒரு ஒரு பருவத்திற்கும் நோய்க்கும் அரிசி இனங்களை சாப்பிட்டு வந்தனர்.  தமிழகத்தில் மட்டும் 140 வகையான அரிசி இனங்கள் உள்ளது. 

Advertisment
Advertisements

இப்படி மாறுபட்ட அரிசி, திணையை சாப்பிட்டு வரும் போது 30 வயதிற்கு மேல் சர்க்கரை, ரத்த கொதிப்பு, மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுக்க முடியும்" என்று கூறினார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: