/indian-express-tamil/media/media_files/2025/09/25/download-15-2025-09-25-14-33-07.jpg)
உடலுக்கும் மனதுக்கும் ஒருசிறிய ஓய்வைத் தேடி, மலை பகுதிக்குச் சென்று சற்றே குளிர்ச்சியோடு சுத்தமாக இளைப்பாறலாம் என்று எண்ணும்போது, பெரும்பாலும் நம் நினைவில் உடனே ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற புகழ்பெற்ற இடங்கள் தோன்றும். ஆனால், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள, உலக பாரம்பரிய தளமாக உள்ள இன்னும் பல அறியாத கோடை விடுமுறை இடங்கள் இந்தியாவில் இருக்கின்றன என்பதை பலர் அறிந்திருப்பதில்லை.
மூடுபனியால் மூடப்படும் காலையிலோ, அடிக்கடி எட்ட முடியாத அடர்ந்த காடுகளோ, அமைதியுடன் இயற்கை வாழ்வைத் தாங்கும் கிராமங்களின் அழகோ — இவை எல்லாவற்றையும் அனுபவிக்க விரும்புகிறவர்களுக்கு இந்த இடங்கள் சிறந்த தேர்வாக அமையும். இப்போது, அந்த இடங்களின் பட்டியலை ஒரு நேரத்தில் பார்ப்போம்.
ஆகும்பே
"தென் இந்தியாவின் சிரபுஞ்சி" என பெயர்பெற்ற இந்த மழைக்காடுகளால் சூழப்பட்ட அழகிய ஊர், இயற்கையை ரசிக்க விரும்புகிறவர்களுக்கும், சூரியன் அஸ்தமிக்கும் கண நேரத்தை ரசிக்க நினைப்பவர்களுக்கும் மிகவும் பொருத்தமான இடமாகும்.
வாகமோன்
பைன் மரக்காடுகள்,பனி சூழ்ந்த மலைகள் மற்றும் ரோலிங் புல்வெளிகள் நிறைந்த அமைதியான ஊர் இது.
குட்ரமுக்
மலையேற்றம் மற்றும் பசுமை மலைகளில் சஞ்சரிக்க விரும்பும் பயணிகளுக்கு உகந்த வசதிகளை கொண்ட இந்த ஊர், சாகச அனுபவங்களை நாடும்வர்களுக்கு குட்ரமுக் ஒரு சிறந்த இடமாகும்.
அம்போலி
அழகிய பசுமை காடுகள் மற்றும் இடை இடையே விழும் நீர்வீழ்ச்சிகளால் நிறைந்த, அமைதியான மலை பகுதியாகும் இவ்விடம். குறிப்பாக மழைக்காலங்களில் இங்கு செல்லும் அனுபவம் மேலும் விசேஷமானதாக இருக்கும்.
பொன்முடி
திருவனந்தபுரத்திலிருந்து சிறிது நேர பயணத்திலேயே பொன்முடி சென்றுவிடலாம். பொன்முடி செல்லும் பாதைகள் காற்றோட்டம் நிறைந்தும், கண்களைக் கவரும் டீ எஸ்டேட்களுடனும் ரம்மியமாக காட்சி தரும்.
பந்தர்தாரா
புகழ்பெற்ற ஆர்தர் ஏரி மற்றும் ரந்தா நீர்வீழ்ச்சிகள் இங்குள்ளவை. அமைதியான இந்த பகுதிகளில் முகாம் போட்டு, ஓய்வாக அமர்ந்து வானில் பிரகாசிக்கும் நட்சத்திரங்களை பார்க்கும் அனுபவம் மகிழ்ச்சியளிக்கும்.
யானா
யானா மலைகளில் பாறைகளின் அமைப்பு மிகவும் விசேஷமானது. சுற்றுப்புறம் மற்றும் இயற்கை வளங்களை கெடுக்காமல் பாதுகாத்து, இயற்கையை பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும் அதன் முக்கியத்துவத்தை உணரவும் விரும்பும் ஈக்கோ டிராவலர்களுக்கு இது ஏற்ற இடமாகும்.
மீசா புலிமலா
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இரண்டாவது உயரமான சிகரம் இதுதான். இங்கு மூச்சு நொந்த வைக்கும் அழகான இயற்கை காட்சிகள் மற்றும் மிதமான மலையேற்ற பாதைகள் காணப்படுகின்றன.
அடுத்த சுற்றுலாவிற்கு திட்டமிடும் போது, மேற்கூறிய இடங்களை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us