/indian-express-tamil/media/media_files/2025/08/22/coffee-freepik-2025-08-22-20-59-36.jpg)
ஒரு நாளைக்கு இரண்டு கப் காபி குடிப்பது பெரும்பாலான மக்களுக்கு பாதுகாப்பானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். Photograph: (Freepik)
காபி பிரியர்களே உஷார், ஒரு நாளைக்கு 2 கப் காபி குடிப்பதால் உடலில் இருந்து இந்த ஊட்டச்சத்துக்கள் இழப்பு ஏற்படலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
உணவு வேளைகளில் காபி குடிக்கும் நேரத்தை சரிசெய்வது ஏன் முக்கியம் என்பதையும், ஆரோக்கியமாக இருக்க இந்த விளைவுகளை எவ்வாறு குறைப்பது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு நாளைக்கு இரண்டு கப் காபி குடிப்பது பெரும்பாலான மக்களுக்கு பாதுகாப்பானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், இதனால் சில ஆரோக்கிய நன்மைகளும் கூட கிடைக்கலாம், ஆனால் இது உடலில் ஊட்டச்சத்து உறிஞ்சுதலைக் குறைக்கும்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/08/22/coffee-freepik-2-2025-08-22-21-01-33.jpg)
பெங்களூருவில் உள்ள ஆஸ்டர் வைட்ஃபீல்ட் மருத்துவமனையின் தலைமை மருத்துவ உணவியல் நிபுணர் வீணா வி. கூறுகையில், காபி சில ஊட்டச்சத்துக்களை, குறிப்பாக இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதைத் தடுக்கலாம். காபியில் உள்ள பாலிஃபீனால்கள் என்ற கலவைகள் இரும்புச்சத்துடன் பிணைந்து, இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதை கடினமாக்குகின்றன.
வைட்டமின் டி உறிஞ்சுதல்: காஃபின் வைட்டமின் டி உறிஞ்சுதலிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம், ஆனால் இந்த தாக்கம் எந்த அளவிற்கு இருக்கும் என்பது குறித்து இன்னும் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
சிறுநீர் பெருக்கி விளைவு: காபி குடிப்பதால் சிறுநீர் அதிகமாக வெளியேறும். இதனால் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி போன்ற நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள் உடலில் இருந்து வெளியேறக்கூடும்.
தைராய்டு பிரச்சினைகள் உள்ளவர்கள் காபி குடிக்கும்போது மருந்துகளின் உறிஞ்சுதல் குறையக்கூடும்.
இறுதியாக, சில நோயாளிகளுக்கு காபி குடிப்பதால் இரைப்பை அழற்சி (Gastritis) அதிகரிக்கக்கூடும் என்றும் வீணா கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.