Kanmani Manoharan: விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கண்மணி மனோகரன். தன்னைப் பெண் பார்க்க வரும் பாரதிக்கு, தனது அக்கா, கண்ணாம்மாவை பிடித்துப் போக, அவளையே திருமணம் செய்துக் கொள்கிறான். அவனது தம்பி அகிலுக்கு அஞ்சலியைப் பிடித்துப் போக, இது தான் நேரம் என்று கருதி, தம்பியை திருமணம் செய்துக் கொண்டு, கண்ணாம்மா வாழ்க்கையைக் கெடுத்து, பாரதியை அடைந்து விடலாம் என கணக்குப் போடுகிறாள் அஞ்சலி. இப்படியான நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கண்மணி.
Advertisment
கண்மணி மனோகரன்
கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்து வளர்ந்த கண்மணி, சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்தவர். இவரை வீட்டில் ஸ்வீட்டி என்று தான் அழைப்பார்களாம். படித்து முடித்ததும், ஒரு ஈஸியான வேலையை செய்ய ஆசைப்பட்ட அவருக்கு நடிப்பில் அதிக ஆர்வம் இருந்திருக்கிறது. ஒரு நாள், ஆடிஷன் தொடர்பாக இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவைப் பார்த்த கண்மணி, தனது புகைப்படங்களையும் டிக்டாக் வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார். அடுத்த நாள், பாரதி கண்ணம்மா சீரியலின் இயக்குனர் பிரவீன் பென்னட்டிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்திருக்கிறது.
செலக்ட் ஆவோமா, என பாதி சந்தேகத்தில் அந்த ஆடிஷனில் கலந்துக் கொண்ட கண்மணிக்கு, முக்கியமான வில்லி ரோலை கையில் கொடுத்ததும் தலை கால் புரியவில்லையாம். நிஜத்தில் ஜாலியான அவருக்கு, சீரியலில் படு சீரியஸான வில்லி வேடம். இதனை உள் வாங்கிக் கொள்ள சிறிது நாட்கள் பிடித்ததாம்.
ஷூட்டிங் இல்லாத நாட்களில் தோழிகளுடன் வெளியில் சுற்றும் கண்மணிக்கு மியூஸிக் கேட்பதும் பிடித்தமானதாம். உணவு என்றால் சைனீஸ், தாய்லாந்து உணவுகளை விரும்பி சாப்பிடுவாராம். லைட் கிரீன், லெமன் எல்லோ நிற உடைகளைக் கடையில் பார்த்து விட்டால் நிச்சயம் வீட்டிற்கு அள்ளிக் கொண்டு வந்து விடுவாராம்.