Bigg Boss Tamil 3 - Day 22: பிக்பாஸ் நிகழ்ச்சியில் திங்கள் கிழமை என்றாலே இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடக்கும். அதற்கு முன்பாக நேற்றைய நிகழ்ச்சியில் நடந்த சில விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.
வனிதா இல்லாத வீட்டில் சத்தம் குறைவாக இருக்கிறது. சரவணன் தனது ‘பாடி லாங்வேஜை’ கிண்டல் செய்வதாகக் கூறி தேம்பி தேம்பி அழுதார் மோகன் வைத்யா. ஒரு பக்கம் இதற்காக வைத்யாவுக்கு ஆதரவுகள் குவிந்தது. ஆனால் சரவணன் தான் தவறாக எதுவும் செய்யவில்லை என்றார். பின்னர் நாமினேஷன் நேரம் வந்தது.
பெரும்பாலானவர்கள் மீரா மற்றும் சரவணன் பெயரைக் குறிப்பிட்டனர். தர்ஷன் மீது தவறான குற்றச்சாட்டை கூறி வருகிறார் என்பதால் மீராவின் பெயரை பல போட்டியாளர்கள் தெரிவித்தனர். அதேபோல, மோகன் வைத்தியாவை கேளி செய்ததால் பலரும் சரவணின் பெயரை எலிமினேஷனுக்கு பரிந்துரைத்தனர். இறுதியில் மீரா மிதுன், அபிராமி, சரவணன், சேரன், மோகன் வைத்யா உள்ளிட்டோர் நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்தனர். பின்னர் சமையல் அணியில் உள்ள மதுமிதா, சரவணன் மீது சிறு குற்றச்சாட்டுகள் எழுந்து, பின் மெதுவாக அடங்கியது.
இதைத் தொடர்ந்து ‘நான் சொல்வதெல்லாம் உண்மை’ என்ற டாஸ்க் வழங்கப்பட்டது. இதில் பேசிய அபிராமி, முகின் ராவ் இந்த வீட்டில் நண்பனாக கிடைக்க பெற்றதில் மகிழ்ச்சி என்றும் அந்த அன்பை வெளிப்படுத்தும் விதமாக ‘ஐ லவ் யூ’ சொன்னார்.
பெரும்பாலான போட்டியாளர்கள் அனைவரும் மீரா மிதுன் குறித்து நெகட்டிவ் கருத்துகளை தெரிவித்தனர். அனைத்தையும் போட்டியாகவே பார்ப்பதாக கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் மீரா மிதூன்.
அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது, கவினை ’அண்ணா’ என்று அழைத்தார் லாஸ்லியா. இதனால் மனமுடைந்த கவின், நீச்சல் குளம் பகுதியில் அமைதியாக சென்று அமர்ந்துவிட்டார்.
எப்போதும் போல சேட்டைகள் செய்து மோகன் வைத்யாவை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார் சாண்டி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.