உடல் வெளியேற்றும் ஒருவகை நச்சு கழிவுதான் யூரிக் ஆசிட். இந்நிலையில் நமது சிறுநீரகம் இதை சுத்திகரித்து வெளியேற்றும். சிறுநீரகம் இதை செய்யவில்லை என்றால், உடலில் உள்ள கால், கை, விரல்களின் முட்டியில் இது தேங்கிவிடும். இதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம்.
இந்நிலையில் இதுபோன்ற சிக்கல் ஏற்படாமல் இருக்க நாம் பாகற்காய் ஜூஸ் குடிக்கலாம். பாகற்காயில் இரும்பு சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி உள்ளது. மேலும் இதில் கால்சியம், பீட்டா கரோட்டின் உள்ளது.
விலங்குகளிடத்தில் சோதனை செய்ததில், யூரிக் ஆசிட் அளவை பாகற்காய் ஜூஸ் குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. கொலஸ்ட்ரால் ஏற்படாமல் தடுக்கிறது. வயிறு சமந்தமான நோய்யை கூட குணப்படுத்துகிறது.
உங்களால் முடிந்தால் தினமும் அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறையாவது பாகற்காய் ஜூஸை குடிக்க வேண்டும். அப்படி ஜூஸ் குடிக்க முடியவில்லை என்றால் அவித்த பாகற்காய்யை பொறியல் செய்து சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“