சுவையான பாவக்காய் குழம்பு செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பாவக்காய் - 200 கிராம்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - சிறிதளவு
புளி - 1 எலுமிச்சை அளவு
எண்ணெய் - 3 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 2
பூண்டு - 15 பல்
கறிவேப்பிலை - 1 கொத்து
தக்காளி - 2
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - சிறிதளவு
வெல்லம் - 1 டீஸ்பூன்
செய்முறை
முதலில் பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் நறுக்கிய பாகற்காயுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் புளி கரைச்சல் தயார் செய்யவும்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் ஊற வைத்த பாகற்காயை சேர்த்து வதக்கி தனியாக எடுத்துக் கொள்ளவும். இப்போது அதே கடாயில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். அதன் பின் அதில் தக்காளி சேர்க்கவும்.
இப்போது வதக்கிய பாகற்காயை சேர்க்கவும். அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறவும். பின் புளி கரைசல் ஊற்றி 10 நிமிடம் கொதிக்க விட்டு இறுதியாக வெல்லம் சேர்த்து இறக்கினால், சுவையான பாவக்காய் குழம்பு தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“