பிளாக் டீ-யை தினமும் குடிப்பதால், அதிக சக்தி கிடைக்கும். இதில் காஃபைன், ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. இந்நிலையில் தினமும் பிளாக் டீயுடன் காலை பொழுதை தொடங்கினால் என்ன நடக்கும் என்பதை தெரிந்துகொள்வோம்.
இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்டான பாலிபினால் செல்களை சேதமடைவதை குறைக்கும். இதனால் மோசமான நோய்கள் ஏற்படாது. இது தொற்றுகளை பரப்பும் நுண்ணுயிரிகளுக்கு எதிராக செயல்படும். குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
பிளாக் டீ-யில் கெட்டிசின்ஸ், தியாபிளபின்ஸ் உள்ளது இவை கொலஸ்ட்ராலை குறைக்கும். இதில் இருக்கும் பிளாப்பநாய்ட்ஸ் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இதனால் இதயம் சமந்தமான நோய்கள் குறையும்.
நமது கவனம் சிதராமல் இருக்க, உதவுகிறது. இதில் உள்ள காஃபைன், எல்- தியனின் என்ற அமினோ ஆசிட் நாம் கவனம் சிதராமல் இருக்கவும், எச்சரிக்கையுடன் செயல்படவும் உதவுகிறது.
இதில் குறைந்த கலோரிகள் உள்ளது. இதில் உள்ள பிளாபோனீஸ் வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது. மேலும் உடல் எடையும் குறையும்.
இந்நிலையில் ஒரு நாளைக்கு 2 கப் பிளாக் டீ வரை குடிக்கலாம். அதற்கு மேலாக குடித்தால், பாதிப்பு ஏற்படும். காலையில் ஒரு கப் பிளாக் டீயுடன் தொடங்கினால் அதிக நன்மைகள் ஏற்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“