தோசை மாவில் இப்படி ஒரு முறை போண்டா செய்து பாருங்க. சூப்பர் சுவையில் இருக்கும்.
தேவையான பொருட்கள்
தோசை மாவு - 3 கரண்டி
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
கருவேப்பிலை
ரவை - 3 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
போண்டா சிம்பிள் செய்முறை: முதலில் தோசை மாவை ஒரு சிறிய அகலமான பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு அவற்றுடன் ரவை சேர்த்து கரண்டியால் மிக்ஸ் செய்து கொள்ளவும். தொடர்ந்து கடலை மாவு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கிளறிக்கொள்ளவும்.
பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.
இந்த மாவை ஒரு மூடியால் 10 முதல் 15 நிமிடங்களுக்கு நன்றாக ஊற வைத்துக்கொள்ளவும்.இப்போது கடாயில் எண்ணெயை சூடேற்றி காய்ந்ததும், உருண்டைகளாக பிடித்து ஒன்றன் பின் ஒன்றாக எண்ணெய் இட்டு பொரிக்கவும். மாவு எல்லா பக்கமும் பொன்னிறமாக பொரிந்ததும் அவற்றை எடுத்து ருசித்து மகிழவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“