சமையலறையில் திறமையாக இருப்பது பயனுள்ள ஹேக்குகளைக் கற்றுக்கொள்வதன் மூலம், சமையலறையில் நேரத்தையும் சக்தியையும் சேமிக்கலாம்.
எனவே, நிபுணரால் சரிபார்க்கப்பட்ட தகவலை உங்களுக்குக் கொண்டு வருவதற்கான எங்கள் தேடலில், ப்ரோக்கோலியை எப்படிச் சரியாகக் கழுவி சுத்தம் செய்வது என்பதைப் புரிந்துகொள்ள முடிவு செய்தோம்.
ப்ரோக்கோலியை எப்படி சுத்தம் செய்வது?
ப்ரோக்கோலியை ஓடும் நீரின் கீழ் கழுவவும். ப்ரோக்கோலியின் மேற்பரப்பில் இருந்து அழுக்கை அகற்ற, அதை உங்கள் கைகளால் லேசாக தேய்க்கவும்.
நீங்கள் ப்ரோக்கோலியின் பெரிய இலைகள், நீளமான தண்டுகளை அகற்றலாம். ஏனெனில் அவற்றில் அதிக அழுக்கு இருக்கலாம்.
ப்ரோக்கோலியை ஒரு பாத்திரத்தில் போட்டு குளிர்ந்த நீரால் மூடி வைக்கவும். எஞ்சியிருக்கும் துகள்களை அழிக்க உதவ, அதை தண்ணீரில் சுழற்றவும். ஊறவைக்க சிறிது நேரம் கொடுங்கள்.
மீண்டும் கழுவவும்: ஊறவைத்த பிறகு, ப்ரோக்கோலியை ஓடும் நீரின் கீழ் நன்கு கழுவவும், அசுத்தங்கள், மண்ணை அகற்றவும்.
பூச்சி
ப்ரோக்கோலியில் எப்போதாவது சிறிய பூச்சிகள் இருக்கும், குறிப்பாக பூக்களில். ப்ரோக்கோலியை நன்கு பரிசோதித்து, ஏதேனும் இருந்தால், அவற்றை ஒரு பிரஷ் மூலம் மெதுவாக கழுவவும் அல்லது சிறிது நேரம் உப்பு நீரில் ஊறவைப்பதன் மூலம் அவற்றை அகற்றவும்.
நீங்கள் விரும்பினால், ப்ரோக்கோலியை வெஜிடபிள் பிரஷ் மூலம் கழுவலாம். ப்ரோக்கோலி பூக்களின் அழுக்கை சுத்தம் செய்ய இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
“ப்ரோக்கோலியை சமைப்பதற்கு முன் அல்லது சேமித்து வைக்கும் முன், சுத்தமான கிச்சன் டவல் அல்லது பேப்பர் டவல் மூலம் சுத்தம் செய்த பின் உலர வைக்கவும். அதை உலர்த்துவது தண்ணீரின் காரணமாக சமைக்கும் போது சுவை நீர்த்துப்போவதைத் தடுக்க உதவுகிறது, ”என்று நாயர் கூறினார்.
ப்ரோக்கோலி ஒரு வெர்சட்டைல் மற்றும் ஆரோக்கியமான காய்கறி என்றாலும், மேற்பரப்பில் இருக்கும் அழுக்கை அகற்ற, சமைக்கும் முன் அதை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.
எச்சங்களை அகற்றவும்
ப்ரோக்கோலி சாகுபடியில் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. எஞ்சியிருக்கும் ரசாயனங்களிலிருந்து விடுபடுவதற்கு சுத்தம் செய்வது உதவியாக இருக்கிறது என்று, உணவியல் நிபுணர் டிடி அஞ்சனா பி நாயர் கூறினார்.
நன்றாக சுத்தம் செய்யவில்லை என்றால், என்ன நடக்கும்?
முழுமையாக சுத்தம் செய்யப்படாத மற்றும் அசுத்தங்களைக் கொண்ட ப்ரோக்கோலி ஆரோக்கியத்தில் கடுமையான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
ப்ரோக்கோலியின் மேற்பரப்பு அழுக்கு, பூச்சிக்கொல்லிகள், உரங்கள் மற்றும் கிருமிகள் போன்ற தீங்கு விளைவிக்கும் அசுத்தங்களால் நிரம்பியிருக்கலாம். நீங்கள் அதை சரியாக சுத்தம் செய்யாவிட்டால், தீங்கு விளைவிக்கும் நச்சுகளை சாப்பிட்டு உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும்.
உணவு மூலம் பரவும் நோய்
அறுவடை, போக்குவரத்து அல்லது சேமிப்பின் போது அசுத்தமான நீருக்கு ப்ரோக்கோலி வெளிப்பட்டிருந்தால், அதில் ஈ.கோலி, சால்மோனெல்லா அல்லது லிஸ்டீரியா உள்ளிட்ட அபாயகரமான பாக்டீரியாக்கள் இருக்கலாம்.
இந்தக் கிருமிகளை உட்கொள்வதால் குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுப் பிடிப்பு போன்ற அறிகுறிகளுடன் உணவு மூலம் பரவும் நோய்கள் ஏற்படலாம்.
ப்ரோக்கோலி சாகுபடியில் பூச்சிக்கொல்லிகள் எப்போதாவது பயன்படுத்தப்படுகின்றன. கழுவும் போது இந்த எச்சங்கள் போதுமான அளவு அகற்றப்படாவிட்டால், இது நீண்ட கால ஆரோக்கிய விளைவுகளை ஏற்படுத்தும்.
அலர்ஜி
தற்செயலாக சாப்பிடும் போது, பூச்சிகள் அல்லது அவற்றின் முட்டைகள் போன்ற அசுத்தங்கள் சிலருக்கு ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தக்கூடும் என்று நாயர் பகிர்ந்து கொண்டார்.
ஒரு கிண்ணத்தில் தண்ணீர், உப்பு மற்றும் மாவு கலந்து, அதில் ப்ரோக்கோலி சேர்த்து நன்கு கழுவவும்.
இது மறைந்திருக்கும் புழுக்களை உடனடியாக வெளியேற்றலாம்.
Read in English: How to clean broccoli properly before use?
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.