மூட்டு வலி, வீக்கம் குறையும்… இந்தச் செடியின் இலைகளை வைத்த இப்படி ஒத்தடம் கொடுங்க; டாக்டர் மைதிலி

உடம்பில் எங்காவது வலி, வீக்கம் ஏற்பட்டால், குறிப்பாக மூட்டு வலி, கை கால் வலி, இடுப்பு வலி, கழுத்து வலி போன்ற எலும்பு தொடர்பான வலிகளுக்கு எருக்கன் இலை ஒரு சிறந்த நிவாரணி.

உடம்பில் எங்காவது வலி, வீக்கம் ஏற்பட்டால், குறிப்பாக மூட்டு வலி, கை கால் வலி, இடுப்பு வலி, கழுத்து வலி போன்ற எலும்பு தொடர்பான வலிகளுக்கு எருக்கன் இலை ஒரு சிறந்த நிவாரணி.

author-image
WebDesk
New Update
Erukkan Chedi benefits Ayurveda Doctor Mythili

Erukkan Chedi benefits Ayurveda Doctor Mythili

நம் கண்முன்னே சாதாரணமாகக் காணப்படும் எருக்கன் செடியில் ஏராளமான மருத்துவ குணங்கள் மறைந்திருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? கிராமப்புறங்களில் இன்றும் பலரும் எருக்கன் செடியை பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தி வருகின்றனர். அதன் அற்புதமான பலன்கள் பற்றி இந்த வீடியோவில் விரிவாக பேசுகிறார் டாக்டர் மைதிலி. 

Advertisment


 
உடம்பில் எங்காவது வலி, வீக்கம் ஏற்பட்டால், குறிப்பாக மூட்டு வலி, கை கால் வலி, இடுப்பு வலி, கழுத்து வலி போன்ற எலும்பு தொடர்பான வலிகளுக்கு எருக்கன் இலை ஒரு சிறந்த நிவாரணி. இதில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் (anti-inflammatory) வீக்கத்தை விரைந்து குறைக்கும்.

பயன்படுத்தும் முறை:

இரண்டு கைப்பிடி அளவு எருக்கன் இலைகளை எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்யவும்.

Advertisment
Advertisements

இலைகளை நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெயில் லேசாக வதக்கவும்.

வதக்கிய இலைகளை ஒரு சுத்தமான காட்டன் துணியில் வைத்து மூட்டை போல கட்டி, வெதுவெதுப்பான சூட்டில் வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கவும்.

தொடர்ந்து 30 நாட்கள் இவ்வாறு செய்து வந்தால், வலி மற்றும் வீக்கம் படிப்படியாக குறையும், என்கிறார் டாக்டர் மைதிலி.

 

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: