New Update
/indian-express-tamil/media/media_files/RYUtNazP3uI7S4YLP617.jpg)
00:00
/ 00:00
தேங்காய் எண்ணை கூந்தலுக்கு நல்லது, இது உங்களை கூந்தல் பளபளக்கும், கூந்தல் வளரும். இந்நிலையில் நாம் தேங்காய் எண்ணெய்யில், நெல்லிக்காய் பொடி சேர்த்து பயன்படுத்தினால் நமது கூந்தல் நன்றாக வளரும் என்று கூறப்படுகிறது.
தேங்காய் எண்ணை கூந்தலுக்கு நல்லது, இது உங்களை கூந்தல் பளபளக்கும், கூந்தல் வளரும். இந்நிலையில் நாம் தேங்காய் எண்ணெய்யில், நெல்லிக்காய் பொடி சேர்த்து பயன்படுத்தினால் நமது கூந்தல் நன்றாக வளரும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தேங்காய் எண்ணெய்யில், நெல்லிக்காய் பொடியை சேர்த்து பயன்படுத்தி, மசாஜ் செய்தால் கூந்தல் நீளமாக வளரும். கூந்தலின் நீளம் இரண்டு மடங்காக வளரும்.
நெல்லிக்கயில் உள்ள கால்சியம், நமது கூந்தலை சூரிய கதிர்கள் மற்றும் வெப்பத்தினால் ஏற்படும் சேதத்தை குறைக்கிறது. மேலும் இதில் உள்ள டானின், கூந்தலில் உள்ள கெரோட்டின் உடன் கலந்து கூந்தலை உடைய விடாமல் தடுக்கிறது.
இதில் உள்ள வைட்டமின் சி, கொலஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இந்நிலையில் இவை அதிக செயல்பாடுகளுக்கு உதவுவது போல, கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது.
தேங்காய் எண்ணெய்யில் லயுரிக் ஆசிட் உள்ளது. இதில் சாச்சுரேடட் பேட்டி ஆசிட் உள்ளது. மேலும் இதில் மிரதுவாக்கும் தன்மை உள்ளது. இதனால் வரட்சியடையாமல் பார்த்துகொள்ளும். மேலும் இதில் வீக்கத்திற்கு எதிரான பண்புகள் உள்ளன. இவை நமது தலை மேற்பரப்பை மிரதுவாக்கும்.
தலையில் உள்ள பேன்களை இது கொல்லும். மேலும் அதன் முட்டைகளையும் நீக்கும் என்று கூறப்படுகிறது. இதை நாம் தலைமையில் மசாஜ் செய்து, 1 மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு தலைக்கு குளிக்க வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.